mercredi 26 novembre 2014

ஒளிக்கு உயிர் நீ.. மொழிக்கு விடியல் நீ..


ஒளிக்கு உயிர் நீ.. மொழிக்கு விடியல் நீ..
உன் ஒளிமுகம் காணா விழிகள்
நிற் கதி இன்றி, தனி இனி
இமைகள் ஒரு கணம்
மூடித் திறப்பதற்குள்
விழிகளை களவு செய்கிறார்
தாய் நிலத் திருடர்கள்..
ஈழக்கதிரோனே
கிழக்கில் உதயமும்
வடக்கில் வசந்தமும்
சுறண்டலின் தலமையாகிவிட்டன
ஒளிக்கு உயிர் நீ மொழிக்கு விடியல் நீ
உன் ஒளிமுகம் காணும் நாள் என் நாளோ...
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...