நிலா முற்றம் என்றே நினைந்தேன்
நிமிடங்கள் கழிந்தன
நிசப்த்தங்கள் கழிந்தன
ஸ்பரிசங்களில் வியர்வைத் துளிகள்
மதனும் ரதியும் மலர் அணையில்
உலா போன காலங்கள் கனவா
விண்ணிலவே உனக்கு மரணம் இல்லை
மண்ணில் நிலாக்கள் தேய்கின்றன
வளர் நிலா ஆவதில்லை
நிலா என அழைத்தவன்
இன்னொரு நிலாவில்
அழகின்றி ஓர் நாள்
அவனையும் காண்பேன்
அன்றே எனக்கு அமாவாசை
பாவலர் வல்வை சுயேன்