ஆகாசம் தொடும் ஆலும் விட்டகலவில்லை
பற்றி நிக்கிறது பாதங்களால் தாய் மண்ணைவரப்புகள் வளி நின்று உரம் கூட்டும் அறுகும்
பற்றி நிக்கிறது வேர்களால் தாய் மண்ணை
கொடி இடை நீந்தும் தாமரையும் நீரடி சென்று
பற்றி நிக்கிறது நர்த்தனக் கால்களால்
தாய் மண்ணை.. ..
வெண் பனிச் சாரல் பட்டும் வெந்திடும் மனமே
உன் அடியில் எங்கே தாய் மண்
உன்னை என்னைத் தாங்கி உலகின் கண்
அறிமுகம் தந்தது தாய் மண்ணல்லவா...
Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...