மகுடம் விட்டு வீழ்ந்தாய் மடி தாங்கி அணைத்தேன்
கன்னம் வைத்து கன்னத்தில் முத்தம் இட்டாய்
உடல் பொருள் உயிராகி கரையென கரங்கள் நீண்டன
ஏதேதோ மயக்கம் எங்கெங்கோ தயக்கம்
ஓட்டத்தை நீ நிறுத்தவில்லை
ஊராரும் உற்றாரும் உன் உச்சி மோந்தனர்
வயல்களும் மலர்களும் மாந்தோப்பு குயில்களும்
உனக்கே உனக்கென காதல் கடிதம் கொடுத்தன
கற்பு நெறி காத்து களங்கம் அற்ற கன்னியாகவே
கடலில் கலந்து சல்லாபம் செய்தாய்
கங்கையே நான் உன் அன்னையடி...
பாவலர் வல்வை சுயேன்
கன்னம் வைத்து கன்னத்தில் முத்தம் இட்டாய்
உடல் பொருள் உயிராகி கரையென கரங்கள் நீண்டன
ஏதேதோ மயக்கம் எங்கெங்கோ தயக்கம்
ஓட்டத்தை நீ நிறுத்தவில்லை
ஊராரும் உற்றாரும் உன் உச்சி மோந்தனர்
வயல்களும் மலர்களும் மாந்தோப்பு குயில்களும்
உனக்கே உனக்கென காதல் கடிதம் கொடுத்தன
கற்பு நெறி காத்து களங்கம் அற்ற கன்னியாகவே
கடலில் கலந்து சல்லாபம் செய்தாய்
கங்கையே நான் உன் அன்னையடி...
பாவலர் வல்வை சுயேன்