வாழ்ந்து பார்த்தேன் வாழ்வும் வளமும் எதிலும்
சுகம்தானே
ஏனோ வீழ்ந்தேன் மடமை யினாலே மதுவின்
மடிமேலேமயக்கம் தீரலையே மனசும் ஆறலையே !
என் உள்ளம் புகுந்து ஆட்டுகிறாய்
குணமும் கெட்டு உறவும் விட்டு
ஊதாரியாகி சிரிக்கின்றேன்
தெரிந்தும் நானே நடிக்கின்றேன்
ஈகோ தானே என் கிரீடம்
ஆணவம் எனது சிம்மாசனம்
நல்லவன் தானே நானும் உன் துணை இல்லாமல்
மதுவே மதுவே எனக்கு நீயேன் மந்திரியானாய்
வீதியில் வீழ்ந்தும் சகதியில் புரண்டும்
ஊரார் சிரித்திட ஏனோ வாழ்கின்றேன்
உயிரும் உறவும் பட்டிணிச் சாவில் துடித்தாலும்
ராச்சியம் இல்லா ராஜா நானே பரியில் போகின்றேன்
குடிப்பவனே என் கூட்டாளி
பெருங் குடி மகனாய் ஊதாரி
தூயவனா நான் கொடியவனா மதுவின் காதலனா
கட்டிய தாலியும் கம்மல் வளையலும் அடகுக் கடையிலே
அவள் கலங்கியே அழுதும் காணா இன்பம்
வோதை மயக்கத்திலே
வீதியில் சீதையின் வார்த்தை கேட்டேன்
தீயில் குளித்திட தினம் தினம் உதைத்தேன்
தீயில் குளித்து தீயாய் எரிந்து தூயவள் போணாளே
மதுவே மதுவே என்னை குடித்திடு
மயக்கம் வேண்டாம் மரணம் வேண்டும்
இழி நிலை வாழ்வு இனியும் வேண்டாம்
என்னை நீயே கொன்றுவிடு....