vendredi 31 octobre 2014

நிராயுத பாணி நான் முழங்குகிறாய் நீ ..


நிராயுத பாணி நான் முழங்குகிறாய் நீ
போர் முரசம்
தீவிர வாதமோ தீண்டாமையோ
இணை சேர்ப்பதில்லை இருவரையும்
நிலா அல்ல நீயும் நானும்
தேய்ந்தாலும் வளர்வதற்கு
அலைகிறேன்
உன் நினைவின் வலிகளோடும்
சுமையின் ரணங்களோடும்
வந்துவிடு களிகிறது கனாக்காலம் ..

Kavignar Valvai Suyen

நாம் என்ற அன்புச் சங்கிலியை அறுத்துவிட்டு ..


நாம் என்ற அன்புச் சங்கிலியை அறுத்துவிட்டு
நான் என்ற ஆணவம் கொள்ளாதே என்னுயிரே
அன்பால் இணைந்த பந்தம் இது
ஏற்ற தாழ்வு இல்லையேல் எமக்கென்றும் பதினாறு

Kavignar Valvai Suyen

jeudi 30 octobre 2014

ரோயா மலரே உன் செவ்விதழ் கண்டே ..


ரோயா மலரே உன் செவ்விதழ் கண்டே - தன்
இதழ் நிறம் மாற்றினாள் பெண் மலர்
முற்களை பதித்துவிடாதே
ஆண் மனசில்
கற் காலம் நீக்கி கனிவுறு காலம் காண
எங்கும் பொழிகிறது அந்தி மழை..
 
Kavignar Valvai Suyen

mercredi 29 octobre 2014

அன்னை அபிராமியின் திருப் பாதம்..


அமைதி இல்லா இராப் பொழுதுகளில் 
பூத்திரி மௌனிக்க வலுவில்லா இராத்திரிகள்
நெஞ்சை வஞ்சித்தன..
பூடை நீக்கி தேறுதல் கொண்டு
மாறுதல் பெற்றேன்
அமைதிப் பூவனத்தில் அற நெறி காத்து
ஆறுதல் கொண்டது மனசு
பிரபஞ்சமே இடிந்து பூமியில் வீழ்ந்தாலும்
அஞ்சேன் இனி அறிந்தேன்
அன்னை அபிராமியின் திருப் பாதம்..
 
Kavignar Valvai Suyen

தேடலில் தேய்ந்த மனிதன் எதையோ ...


தேடலில் தேய்ந்த மனிதன்  எதையோ
எடுத்துப் போக எண்ணுகிறான்
இயலா நிலையில் சொரிகிறான்
ஆற்றுப் பெருக்கில் விழி நீர்
இது ஆனந்தக் கண்ணீரா, ஆற்றாக் கண்ணீரா
சென்றவனை தேடுகிறேன் அவன் திரும்பவில்லை..
 
Kavignar Valvai Suyen

mardi 28 octobre 2014

இறைவன் மனிதனைத்தான் படைத்தான் பூமியில் ..


இறைவன் மனிதனைத்தான் படைத்தான் பூமியில்
மனிதனை காணவில்லை இங்கே
இதயம் உள்ள பொம்மைகள் அழுகின்றன
இரக்கம் அற்ற பொம்மைகள் சிரிக்கின்றன
புழுதிச் சுழற்சிக்குள் படைத்தவனின்  
சலங்கை ஒலி கேட்கிறது  
 
Kavignar Valvai Suyen

தேனீ தேடும் தேனல்ல நீ ..


தேனீ தேடும் தேனல்ல நீ
அன்புத் தேன் நீ

கொப்புடைந்தால் கூடு கலையும்
ராணித் தேனீ நாசம் செய்யும்
நீ அல்ல அந்த ராணித் தேனீ
கிளை உடைந்தாலும்
இலை உதிராமல்
ஒட்டும் இல்லறத் தேன் நீ

தினமும் நனைகிறேன் நான்
தெவிட்டாத தேன் வாழ்வில்
ராணித் தேனீயே உன் ராயாங்கம் நல்லதடி..

பாவலர் வல்வை சுயேன்

lundi 27 octobre 2014

வளை காப்புத் திரு நாள் இன்றெனக்கு ..


வளை காப்புத் திரு நாள் இன்றெனக்கு
காத்திருந்தேன், வருவான் வேலன் என்று
அவன் வரவில்லை
எங்கள் பெயர் சொல்லும் பிள்ளைக்காக
பிளைப்புத் தேடி அவன் வெளி நாட்டில்
வந்து ஆசி சொன்னது வேலன் கோயில்
மணி ஓசை  ...
 
Kavignar Valvai Suyen

சித்திரமா நீ சிலையா தெரியவில்லை ..


சித்திரமா நீ சிலையா தெரியவில்லை
அமர்ந்துவிட்டேன்  கரத்தில்
உன் விரல்களின் உஷ்ணம் அறிந்தே
நீ பதுமை எனக் கண்டேன்
தோழியாய் என்னை ஏற்றுக் கொள்
இருவரும் ஆதித் தமிழ் மொழி பயில்வோம்
அகராதிகளை புரட்டி...
 
Kavignar Valvai Suyen

dimanche 26 octobre 2014

மலர்ந்த பூக்களை மாலை கட்டி ..


மலர்ந்த பூக்களை மாலை கட்டி
மறு நாளே உதிர்க்கின்றீர்
பிறந்த பெண்களை வருந்த வைத்து
வாழ் நாளெல்லாம் உதிர்க்கின்றீர்
உண்மை நிலை உணர்ந்த
விண் நட்சத்திரங்கள்
பூமிக்கு வரமாட்டேன் என்கிறது ..
 
Kavignar Valvai Suyen

எழில் கொண்ட இயற்கையாளே ..


எழில் கொண்ட இயற்கையாளே என் வாசல் வந்தவளே
வண்ண வண்ணச் சட்டை போட்டு உன் அழகை
மெருகூட்டிவிட்டான் வர்ண பகவான்
ஊட்ட ஒளியை  உனக்கு ஊட்டி பிள்ளைக் கனியாய்
உன்னை தத் தெடுத்து தாலாட்டுகிறான் ஆதிசேசன்
கை வீசு அழகே கை வீசென       
தென்றலாய் உன்னைத் தழுவி
காதலிக்கிறான் வாயு தேவன்
வாழ்க மகளே வாழ்க வென
விண்ணவரும் உனை வாழ்த்த
மண்ணில் இந்த மனிதன் ஏனோ
நன்றி மறந்தான் !
நிழல் கொடை நீ கொடுத்தும்
உன் உடல் அறுத்து உயிர் போக்கி
பிணமாய் எரிகிறான் விறகில்
எல்லை இல்லா எழில் இளவரசியே
உலகெங்கும் உன தாட்சியே
நீ இல்லையேல் உயிர் இல்லையே..

Kavignar Valvai Suyen

samedi 25 octobre 2014

வேலைக்காறி ..


எனக்கொரு பெயர் இருந்தும்  என் பெயர் வேலைக்காறி
வேடம் தாங்கல் இல்லை கூலிக்காக மாரடிக்கிறேன் 
உலை அடுப்பு எரியுமா எரியாதா என
காத்திருக்கிறது அடுப்படியில் கலயங்கள்
பட்டுணியில் அழுகிறார் பாலகர்கள்
பசி அறியா குடிகார ஊதாரி என் புரிசன்
சேலை முடிச்சவிழ்க்கும் வரைதான்
நான் அவனின் பத்தினி
தினம் போதை  ஏற்றி வீடு வந்து
என்னை தீக்குளிக்கச் சொல்கிறான்
சந்தேகப் பிராணி!
கூரையின் ஊடே வானத்து நட்சத்திரங்களும்
எட்டிப் பார்க்கின்றன
இவன் ராமனா குசேலனா என்று ...
 
Kavignar Valvai Suyen

vendredi 24 octobre 2014

உயரப் பறக்க இறக்கை இருந்தும் ..

 
உயரப் பறக்க இறக்கை இருந்தும்
மூக்கணாங் கயிற்றில் வாழ்க்கை
ஏறப் படிகள் எத்தனையோ தெரிகிறது
படி தாண்டினால் பத்தினி அல்ல
தூசிக்கும் வார்த்தை, வேசி
கை கால் இயலாதவன்
கட்டிவைக்கிறான் தொழுவத்தில்
சுற்றிச் சுற்றி வருகிறோம்
வட்டம் இட்ட காலடியில், பள்ளத்தாக்கு
எங்கள் வண்ணச் சிறகை ரசிப்பவனே
எண்ணச் சிறகை வெட்டுகிறான்
விண்ணையும் தொட எம்மால் முடியும்
அவிழ்த்து விடுங்கள் தொழுவக் கயிறை
வாங்கித் தருகிறோம் சுதந்திரம் ..
 
Kavignar Valvai Suyen

மண் சட்டி சோற்றுக்கும் மீன் கறி குளம்புக்கும்..


மண் சட்டி சோற்றுக்கும்
மீன் கறி குளம்புக்கும்
அன்றொரு வாசம்
என் மன்னவன் மகிழ்ந்து
புன்னகை பூத்திட
நடு நிசியும் தோக்கும்
 
இன்றைய வாழ்வுக்கும்
இல்லற ஜோதிக்கும்
இரும்பறைக் காலம்
இதில் பந்தமும் பாசமும்
பாஸ்பூட் பரிமாறி பறக்கின்ற காலம்
நடு நிசி ஏதென்றும் நண்பகல் ஏதென்றும்
யாருக்கும் தெரியவில்லை
எதிர் காலக் கனவை தண்ணீரில் எழுதியே
எல்லோரும் எங்கோ போகின்றோம்..
 
Kavignar Valvai Suyen

கலைந்த கூந்தலை கை கோர்த்து ..


கலைந்த கூந்தலை கை கோர்த்து
விளைந்த பயிராய் காத்திருக்கிறேன்
எங்கே தொலைந்தான் என்னவன்
பசுமை இல்லா நிலத்தில் பத்திக்கிறேன்
விண் மழை தொட்டும் அணையவில்லை
அவன் முகம் பார்த்தால் போதும்
பசுமை கொண்டு இதழ்கள் பூர்க்கும் ..
 
Kavignar Valvai Suyen

jeudi 23 octobre 2014

வண்ண நிலாவே என்னுயிர் நிலாவே ..


வண்ண நிலாவே என்னுயிர் நிலாவே
எங்கே ஒளிந்தாய் வா வா முன்னே
உன் முகம் பார்த்து
உணவுண்ணும் நேரம் இது
அம்மா சொல்கிறாள்
அமாவாசை என்று
வளர் மதி நான்தான் முழு மதி நீதான்
இருள் முகில் நீக்கி உன் முகம் காட்டு
விடியலை காண விழி மூடப் போறேன் ..
 
Kavignar Valvai Suyen

சோதிடக் கிளியே சொல்லு சொல்லு ..


சோதிடக் கிளியே சொல்லு சொல்லு
சோதனைக் காலம் என்று தீருமோ
ஏடெடுத்து கொடு ..
கூண்டுக் கிளியின் ஏடெடுப்பில்
ஏழ்மை மாறும் என எப்படி நம்புகிறாய்

சிறகறுத்த கிளியை கூண்டில் இட்டு  
சோம்பேறி சொல்லும் தீமை இது
விடிவில்லா  இவரிடமே
விளக்கொளி தேடுகிறாய்
உயர்வுக்கு ஒளி இவரிடம் உண்டென்றால்
என்றோ இவரே உயர்ந்திருப்பார் ..

Kavignar Valvai Suyen

mercredi 22 octobre 2014

மதுவும் மாதும் ஒன்றென்பார் பொய் என்பேன் ..


மதுவும் மாதும் ஒன்றென்பார்
பொய் என்பேன் .. ..
கல்விச் சாலை அறியாதவன் நான்
விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்
அறிந்தேன் உன்னிடத்தில்
நான் தொடாத அந்த மதுக் கிண்ணம்
என்னை கோபம் கொண்டு பார்க்கிதடி
மாதெனக்கு நீ இருக்க மது ஏனடி ...

Kavignar Valvai Suyen

mardi 21 octobre 2014

தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள் ..


இன்பச் சோலையில் இடி வீழ்ந்து
துன்பச் சிறை வாழ்ந்தோரை
நரகாசுர வதம் தனில்
ஆட்கொண்ட இறைவா
இனிதெனும் தீபாவளித் திருநாள் போல்
என் நாளும் பூமியில் மாந்தர் சிரித்து வாழ்ந்திட 
ஒரு வரம் தர வேண்டும் நீ ....
 
Kavignar Valvai Suyen

வாழ்க்கை பாடத்தின் முகப்பு அட்டையில் ..


வாழ்க்கை பாடத்தின் முகப்பு அட்டையில்
முகங்கள் மாறுவதுண்டு வடுக்களின் வலிகள்
மாறுவதில்லை ..
பறவைகளின் இறகை பறிப்பதை தவிர்த்து
நிழல் தர ஒரு மரமேனும் நிலத்தில் நீ வை
இயற்கையும் உன் தோழியாகும் ..
 
நினைவில் கொண்டதை நிலையாய் வைத்துவிடு
போனது போகட்டும் நோக மனம் விட்டுவிடாதே
துயரங்கள் நிரந்தரம் அல்ல
நாலும் கெட்ட நாகரீக உலகம் இன்று  
சிறைக்குள் சிக்காதே சிறகடிக்கட்டும் மனசு ..

Kavignar Valvai Suyen

மொட்தவிழ்ந்த பூக்களெல்லாம் வாராதோ வண்டென காத்திருக்க ..


lundi 20 octobre 2014

ஒளியால் அழைத்து விழிக்குள் ஒளிக்கிறாய் காதலை ..


ஒளியால் அழைத்து விழிக்குள் ஒளிக்கிறாய் காதலை
உன் மௌனம் ஒன்றே ஆயிரம் இனிமையை
அள்ளிக் கொட்டுதடி .. ..
ஒரு வரியில் என் காதலை
எப்படிச் சொல்வேன் உன்னிடம்
உன் இரு விழி இமையும்
ஒரு முறை அடித்தால் போதும்
அது அழிந்துவிடும்
இன்றொரு நாள் கலைத்துவிடு
உன் மௌன நோன்பினை
இனிய தீபாவளி நன் நாள் இன்று
அனைவருக்கும் சொல்லு நல் வாழ்த்தினை..
 
Kavignar Valvai Suyen     

உதிரக் காட்டில் இயற்கை ..


உதிரக் காட்டில் இயற்கை
உதிர்ந்துவிட்டான் மனிதன்
நிர்வாணம் ஆனது பூமி
புள்ளினங்களும்
இருக்கை இன்றி
வட்டம் இடுகின்றன
இருப்புத் தந்த இயற்கையை
இல்லா தொளித்தவனே  
இயற்கை இல்லையேல்
நீயும் இல்லை என
ஏன் மறந்தாய் ..
 
Kavignar Valvai Suyen

மனிதா நீ தாவும் கிளை உடைந்தாலும் ..


மனிதா நீ  தாவும் கிளை உடைந்தாலும்  - உன்
சபலம் சந்தியில் முந்தானை இன்றி கிடக்கிறது
இங்கொரு வீடும்
அங்கொரு சின்ன வீடும் உனக்கு       
பந்தி இலை விரித்து கஞ்சி நிலை வீழ்ந்தாய்
 
ஏறு முகம் கொண்டவன்  ஏழுலகையும் ஆழ
ஏறி வருகிறான் வான் வீதியில் ..
வேலிச் சண்டையில் நீ
சாதிச் சண்டையில் நீ                                                          
மூதேவி குடி வந்து குடி அறுத்தும்
சனியன் வீட்டுக் கதவையும் தட்டுகிறாய்
மழைக் கால இருட் டென்றாலும்
மந்தி உன் குணம் மாறுதில்லையே...
 
Kavignar Valvai Suyen

dimanche 19 octobre 2014

கிளியே கிளியே வனக் கிளியே ..


கிளியே கிளியே வனக் கிளியே
சிறகிருந்தும் நீ கூண்டில்
வாழ்வெனும் சிறைக்குள்
நான் வதை முகாமில்
பெண்ணடிமை விலங்கும்
உன் சிறைக் கூண்டும் என்று விலகுமோ
நீ அறிவாயோ,நான் அறியேனே.!
 
Kavignar Valvai Suyen

காலங்களை தேடுகிறேன் கைக்குப்பி விளக்கில் ...


காலங்களை தேடுகிறேன் கைக்குப்பி விளக்கில்
நிகழ் காலம் இறந்தே பிறக்கிறது
எதிர் காலம் பிறக்கும் முன்பே
கொள்ளி வைக்கப் படுகிறது
பாட்டனின் காலமே,
இறந்த காலம் என்றாலும் இனிக்கிறது
பாடப் புத்தகத்தில் இருக்கும் இனிப்பை
வாழ்ந்து பார்க்கத் தொட்டுப் பார்க்கிறேன்
எட்டவில்லை எனக்கு என் செய்வேன் நான்...
 
Kavignar Valvai Suyen

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...