நிலா பெண்ணே நிலா பெண்ணே
நீ, தேய்ந்து மறைவது நியமா
ஊர் சொல்லும் சொல்லில்
உண்மை இல்லை உன்னை அறிவேனே
பூரண நிலவே, பூமியின் நிழலில்
முகத் திரை போடுகிறாய்
நாணம் உற்றே நளினம் மெலிந்து
மாதத்தில், ஓர் நாள் மறைகின்றாய்
தேயும் நிழலில் வளர் பிறையாகி
பருவம் பூப்பவளே
புருவ வில்லால் வையகம் எய்து
புன்னகை பூக்கின்றாய்
காணம் பாடும் கவிக் குயில் நான்
அணைக்கத் துடிக்கின்றேன்
வான் மதி ஒளியே சிறகு விரித்தேன்
இரு கை நீரில் உன்னை ஏந்திவிட்டேன்
பாவலர் வல்வை சுயேன்