நாலு முள
கூந்தல்காறி தோகை மெல்ல விரித்தாளே
ஆசைத்தூறல் கூதல்
தொட்டு ஆடும் மயில் அசந்தேனேஆறுகால பூசையிலே சாமியென்று சொன்னாளே
பாவியின்று பயித்தியமாய் சேலை நூலின் பின்னாலே
சினிமா என்றால் சினுங்குகிறாள்
சமையலென்றால் அனுங்குகிறாள்
புடவை கடை பொம்மை போலே
நகை கடையில் நுள்ளுறாளே
அட்டியலு ஒட்டியானம்,
வளையல் மோதிரம் வாங்கி கொடுத்தேன்
வைர நெக்கிலஸ் வாங்கிக் கொடென்டு
பூசை செய்து கொல்லுறாளே
மாதச் சம்பளம் மீதம் இல்லே
மனுசன் எனக்கு மசக்கையாச்சு
ஊத்தை வேட்டி சால்வையிலே
ஊரை சுற்றி வாறேனே
பயித்தியம் பயித்தியம் பயித்தியம்தான்
ஊரே சொல்லு தென்னை பயித்தியம்தான்
பணம் இல்லா பிணமாகி நிழலுக்கும் நிந்தனையானேன்
வாய்க்கரிசி தருவதற்கும் நெற்றிக் காசை வருடுறாளே
பாச நேச பந்த மெல்லாம் பணம்தானென்றால்
போதுமடா சாமி போகும் வளி எங்கே சொல்லு
பாவலர் வல்வை சுயேன்