jeudi 30 avril 2020

உழைப்பாளர் தினம் !!!

உழைப்போர் உலகம் மலரட்டும்
உரிமை வாசம் வீசட்டும்
சரி நிகர் சம நிலை தாழ்வின்றி
உழைக்கும் வர்க்கம் உயரட்டும்

சுறண்டும் வர்க்கம் சுறண்டிச் சுறண்டி
உறிஞ்சுது தோழா உன் குருதி
வீழ்ந்தே கிடந்து அடி தொழுது
அழிந்தே போவதோ மனு நீதி

வானம் பெய்யும் மழை என்று
வறண்ட நிலமாய் கிடவாதே
உழைப்போர் உரிமை உயிர் நாடி
அதை அள்ளித் தின்பதோ பெருச்சாளி
குனிந்து குனிந்து கூனிய முதுகின்
முள்ளந் தண்டே கேழ்விக்குறி

அடிமைத் தழையோ ஆலிலைச் சருகோ
ஆலின் விழுதே நீதானடா
தினைப்புனம் காணா வனக் குயிலும்
உரிமைக் குரலை எழுப்புதடா

அஞ்சிக் கிடக்கும் ஆதவரே
அகிலம் அதிர எழுந்தே நடமிடு
தாழ்ந்தவர் உண்டோ தரணியிலே
உரிமை பெற்றுட உயிர் கொண்டுவா

பாவலர் வல்வை சுயேன்
01.05.2013

samedi 18 avril 2020

ஜீவ,நதி !!!


அன்பே என்னை ஆளும் ஜீவ,நதி நீ
ஆராதனையில் அருளும் தேவி நீ
இளைய நிலா புருவ விழியில்
இருள் கால வழி காட்டி நீ
ஈர்ப்புடை பூமி என நியூற்றன் கண்டான்
அதன் ஆக்க சக்தி ஆனவள் நீ

உன் பெயர் சொல்லும் எப்போதும் என் உதடுகள்
ஊனம் அல்ல மௌனத்தில் உன் உதடுகள்
என்னவளே யாரிடம் இல்லை ஊனம்
ஏளனமே அவரவர் ஊனம்

ஐயம் கொள்வாரவர் அறியாமை தவிர்த்து ஓர் நாள்
ஒன்றும் ஒன்றும் இரண்டல்ல இருவர் மனசும் ஒன்றே
ஓடும் நதியிலும் சுனாமி அலையிலும்
ஔடதம் ஏறி வாழ்வெனும் படகு விட்டோம்
கொரோனா அலையில் கொல்லா அன்பில்
குவலையம் கண்டெழுவோம்
அன்பு மொழி பேசும் ஆருயிர் கிளியே
உன் வண்ண விழிகளிடம் தானே
ஆயுத எழுத்துக்களை கற்றேன்
தாய் மொழியும் வாய் மொழியும்
வார்த்து தருபவளே
என்னை ஆளும் ஜீவநதி நீயே நீயே

பாவலர் வல்வை சுயேன்

vendredi 17 avril 2020

ஏதறிவாய் ஜீவனே !!!


மாயை சூடும் வர்ண வாழ்வே
அறிவேன் உன்னை, அஞ்சேன்
அன்பு நிலையும் அறுவடை சாவும்
கண்கள் கனன்று சொரிய
எழுகின்றோம் வீழ்கின்றோம்
எண்ணில்லை என் செய்வோம்

ஆசைத் தூறலில் அழிந்தே வீழும் கூடுது
கட்டை எரிந்திட கல்லறை சிரித்திட
புழுவாகி பூடாகி புழுத்தலில்
உருகும் ஜீவனுக்கு
இகபர வாழ்வு இனிப்பா கசப்பா
தேடுகிறேன்,
எழுதிய புத்தகம் எங்கே
எட்டவில்லை!

தத்துவ ஞானம் தாளா நின்று
மீளா பொய்கை விட்டகல
விடை கொடு விரும்புகிறேன்

பாவலர் வல்வை சுயேன்

mardi 7 avril 2020

பொன் வான விடியல் எப்போ ...?

செவ்வானம் சிவந் ஒழிய விளைந்த நெல் கதிர் அறுத்து
பொன்வான விடியலிலே தன்மானம் தழைத்திருந்தோமே

உள்ளத்திலே கள்ளம் இல்லை உலகிடத்தில் பொய்யும் இல்லை
லெட்சோப உயிர் மாண்டதிலே ரெத்த வடு இன்னும் ஆறவில்லே
உற்றவரும் இல்லே பெற்ற பிள்ள உயிரும் இல்லே
அள்ளிப்போன சுனாமியிலே எஞ்சியோரும் மீதம் இல்லே
எண்ணில்லாத் துயரிலே துவன்டு மனம் வீழ்ந்திருக்க
தொட்டாலே தொற்றுதடா கொரோனா
விழி நீர் வீழ்ந் ஓடியும், மீண்டெழுவார் யாரும் இல்லே

வீட்டுச் சிறை கூட்டுக்குள்ளே ஊரடங்கு உலகத்திலே
நாளுக்கு நாள் வீழும் உடல்களை எண்ணி எண்ணி
உலகச் செய்தி சுழலுதடா உயிர் வதையில்
அன்றழுதோம் தமிழீழம் மீழ
இன்றழுகிறோம் உலகே மீழ
உற்றவரை குழி மூடி மாயை விட்டகன்றும்
சுழலும் பூமிழில் சாமி உன்னை காணலையே
என்று மாறுமோ இக்,கோலம்
கொரோனா கொன்றுடத்தானோ இக்காலம்

பாவலர் வல்வை சுயேன்

mercredi 1 avril 2020

நிறம் மாறா பூக்கள் !!!

வண்ண வண்ண பாத்தி கட்டி
வண்ண வண்ண பாத்தி கட்டி
எண்ணங்களை விதை தூவி
சொப்பனங்கள்
இறைத்து வைத்தேன்

வாழ்க்கைச் செடி மரமாகி
நிழல் தூங்கவில்லை அம்மா
உதிர்கிறேன் சருகாய்
பாவி மனம் யார் அறிவார்

மொட்டவிழ்ந்த பூவிடத்தில்
தேனீக்களும் சொந்தம் இல்லை
தென்றல் தீண்டா வனக்காட்டில்
திங்கள் எல்லாம் தேயுதம்மா

பூவெடுத்து மாலை கட்டி
சூடித்தர யாரும் இல்லை
சீதனச் சந்தை மந்தை வெளியில்
ஏழைக்கேது வாழ்விங்கே

பூத்த கொடி பூச் சொரிய
மன்னவன் வருவானோ
நாத்து வைத்த நிலத்திலே
நாண அந்தி மூழ்குவதேன்
வா வா மேகமே
நீராட காத்திருக்கேன்

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...