தளர்ந் துளன்று தனிமையில் வீழ்ந் தழுது
துணை என் நிழலையும் துலைத்து விட்டேன்
தாகம் தானோ நிழலுக்கும்
தரை மீது வீழ்ந்திங்கு புன்னகை இழந்ததே
தேடலில் சோகம் தாங்கொணா பாரம்
நிலை இல்லா வாழ் வெனில்
தெரு வீதி போதும் என
புறண்டழும் நிழலை
மடி மீது வா என மனம் உகந்தேன்
முடியவில்லை
உச்சி வெய்யிலே உன்னால்
என் நிழலுக்கும் வேர்க்கிறதே
கூட்டுக்
கதவை நான் திறக்க
என்
இதயக் கதவை இல்லம் திறக்க
நாள்
காட்டியின் இறுதி நொடிகள்
நாளைய
நிழலாக
அத்தியாயங்கள்
புறட்டி
தட்டுகின்றன
மனக் கதவை
புன்னகை இல்லா வாழ்வில்
பூப் பெய்தும் பூகம்பமே
பூக்கள் பூமியில் பாரம் என்றால்
வாழ்வ் விருளில் வாழ் நாள் பொய்யில்
பெண்மை தனை மடந்தை கொள்ளும்
மானிடரே இன்னும் இவ்வுலகில்
பொன் பொருள் சதம் இன்றி
இன்னுயி ரெலாம் வாழ
இறைவா வரம் கொடு
பாவலர் வல்வை சுயேன்