lundi 30 décembre 2019

நிலா முற்றம் !!!!


நிலா முற்றம் என்றே நினைந்தேன்
நிமிடங்கள் கழிந்தன
நிசப்த்தங்கள் கழிந்தன
ஸ்பரிசங்களில் வியர்வைத் துளிகள்
மதனும் ரதியும் மலர் அணையில்
உலா போன காலங்கள் கனவா

விண்ணிலவே உனக்கு மரணம் இல்லை
மண்ணில் நிலாக்கள் தேய்கின்றன
வளர் நிலா ஆவதில்லை
நிலா என அழைத்தவன்
இன்னொரு நிலாவில்
அழகின்றி ஓர் நாள்
அவனையும் காண்பேன்
அன்றே எனக்கு அமாவாசை

பாவலர் வல்வை சுயேன்

mardi 24 décembre 2019

வான் மேகம் !!!


ஆனந்தச் சாரல் தூவுதிங்கே துளிர் தென்றல் 
தென்னங் கீற்றின் நர்த்தன நீராபிசேகம் 
ஆறுகால பூசையில் சிவனாகி 
ஆடுகிறேன் தீர்த்தம்

நாணம் கொண்ட மௌனத்தில் 
ஏகாந்த விழிகள் 
என் மேல் நீ கொண்ட காதலை 
களவின்றி சொல்லுதடி

குளிர் நிலா என நினைந்திருந்தேன் 
நீயும் என்போல் எரி நிலா என, 
உணர்ந்தேன்
கொன்றுவிடு இல்லையேல் வென்றுவிடு
மின்னல் கொடியே யன்னல் இடையில்
உன்னை காண்கிறேன்

பாவலர் வல்வை சுயேன்

vendredi 20 décembre 2019

அழியுமா.. அழியாதா.. உலகு !!!

அழியுமா.. அழியாதா.. உலகு !!! 
21.12.2012

நூறு கோடி வயசடா மனிதா 
இந்த பிரபஞ்ச பூமிக்கு 

அதை ஆளப் பிறந்து ஆளும் நீ 
உலகை கண்டு 
நான்கு லெட்சம் ஆண்டுகளே 
உன்னை உலகே அறியும்

உலக உயிர் அழியுமா...  அழியாதா… 
உனக்குள்ளே அச்சம் மிகு கேழ்வி  

மாயன் எழுதி வைத்தான் அச்சரச் சுவடி
அழியும் உலகென்று 21.12.2012ல்
அகழ்ந்தறிந்தான் அறிவாளி
இதில் எவன்தான் ஞானி
இன்னும் இவ்வுலகு
தன்னுயிரை 
ஈகம் செய்யவில்லை

பூமியை, தின்னும் இன்னொரு பூகோளம்
பூமிக்கருகில் கண்டாயா சொல்
பூமி, தன்னைதானே தின்டு செரித்தாலும்
கோடிகாலம் வேண்டுமே ஜீரணிக்க

சினையுற்ற மணல் நண்டு 
ஒரு நாளும் அழுவதில்லை
தனக்காக 

வாய் இருந்தும் மொழி பேசா பசுவாய் 
நீதி கேழ் வாய்மை காக்கும் உலகு
சினம் தணிந்து மனம் துணிந்து நட
நாலும் தெரிந்தாலும் 
நடக்கப்போவது தெரிவதில்லை நக்கு

பாவலர் வல்வை சுயேன்

mercredi 18 décembre 2019

சாலையிலே சோலைக் குயில் !!!


சாலையிலே சோலைக் குயில் கூவுதம்மா குவுதம்மா
தாளாத சோகம் தனில் மூழ்குதம்மா மாழுதம்மா
செஞ்சோலை வாழ்ந்த குயில் 
செய்ததென்ன குற்றம் அம்மா

ஆதரிப்பார் யாரும் இல்லை 
அன்பு செய்ய நேசம் இல்லை
ஊருக்குள்ளே ஓடுதிங்கே 
இதன் ஓசை நதி
ஓடக்கரை கால்வாயிலே ஜீவ நதி
போர் முடிந்தால் வாழ்வு வரும் 
வசந்தம் எமை தேடி வரும் என்றீரே
வீரம் வீழ்ந்து மாண்ட பின்னே 
மண்ணிலொரு இறைவனை 
இன்னும் நாம் காணலையே

வசந்தம் கொல்லும் வாடைதானே 
வடக்கில் வந்து வீசுதம்மா
உதயம் தந்த சூரியனால் 
கிழக்கில் ஒளி இல்லையம்மா

ஏர் பிடித்த நாளை எண்ணி 
எத்தனை நாள் வாழ்வதிங்கே
வரப்புயர வாழ்வெனும் 
சின்னவரே மன்னவரே 
மனசிருந்தா மார்க்கம் உண்டு
வீதி வாழ் குயில்களுக்கு 
வேடம் தாங்கல் தாருங்களேன்

பாவலர் வல்வை சுயேன்

lundi 16 décembre 2019

இதய ஒலி கேக்கிறதா !!!


ஒளி ஏந்தி வந்துள்ளீர்கள் எமதுறவே 
விழி நீர் சிந்தாதீர்கள் விடியலுக்காகாது

பாச நேசங்களை பற்றறுத்து 
பாதியில் போகவில்லை நாங்கள்
உமக்காகவே போராடினோம் 
உதிரம் சிந்தினோம் 
உயிரையும் தந்துவிட்டோம் 
உளமாற மகிழ்கின்றோம் 
உங்களை பிரியவில்லை

இன்னும் விடியவில்லை இடர் காட்டில் நீங்கள்
முள்ளி வாய்க்கால் முற்றுப் புள்ளி அல்ல
விடியல் வென்றால் வந்தெமை எழுப்புங்கள் 
தாய் மடியில் கொஞ்சம் இளைப்பாறுகின்றோம் 
தாலாட்டுகிறாள் எங்களை தமிழீழத் தாய்

பாவலர் வல்வை சுயேன்

mercredi 4 décembre 2019

பூவுக்குள் நாகம் !!!

கொல்லாமல் கொல்லும் கண்ணே
பூவுக்குள் நாகமடி நீ
களங்கம் அற்ற அன்பும் 
ஒன்று கலந்த உயிரும்
பொய்யாகி போனதடி

கரை காணா காதல் ஓடம்
கலங்கரை ஒளி இன்றி 
கண்ணீரில் மூழ்கிதடி

இதயம் தேடும்
இதய ஒலி கேட்கிறதா
மழை நீரில் குளித்தாலும்
அழித்து எழுதப்படுவதில்லை
உண்மை காதல் உயிர் உள்ளவரை

பாவலர் வல்வை சுயேன்

mardi 3 décembre 2019

குடிசை கூட்டுக்குள் ...


குடிசை கூட்டுக்குள்    
குடியிருப்பு மிகை அழகு     
அது குயிலின் குஞ்சென்றால்
கூவும்வரைதானே தாயின் அன்பும்


பாவலர் வல்வை சுயேன்

dimanche 8 septembre 2019

நிழல் தரு நியங்கள் !!!


தளர்ந் துளன்று தனிமையில் வீழ்ந் தழுது
துணை என் நிழலையும் துலைத்து விட்டேன் 
தாகம் தானோ நிழலுக்கும் 
தரை மீது வீழ்ந்திங்கு புன்னகை இழந்ததே

தேடலில் சோகம் தாங்கொணா பாரம்  
நிலை இல்லா வாழ் வெனில் 
தெரு வீதி போதும் என 
புறண்டழும் நிழலை
மடி மீது வா என மனம் உகந்தேன்
முடியவில்லை
உச்சி வெய்யிலே உன்னால்
என் நிழலுக்கும் வேர்க்கிறதே

கூட்டுக் கதவை நான் திறக்க 
என் இதயக் கதவை இல்லம் திறக்க 
நாள் காட்டியின் இறுதி நொடிகள் 
நாளைய நிழலாக 
அத்தியாயங்கள் புறட்டி 
தட்டுகின்றன மனக் கதவை

புன்னகை இல்லா வாழ்வில் 
பூப் பெய்தும் பூகம்பமே
பூக்கள் பூமியில் பாரம் என்றால்
வாழ்வ் விருளில் வாழ் நாள் பொய்யில் 
பெண்மை தனை மடந்தை கொள்ளும் 
மானிடரே இன்னும் இவ்வுலகில் 

பொன் பொருள் சதம் இன்றி
இன்னுயி ரெலாம் வாழ 
இறைவா வரம் கொடு

பாவலர் வல்வை சுயேன்

vendredi 19 juillet 2019

நாணல் !!


பொய்யிலே புனைந்த வாழ்வு 
மெய் அன்பிலே நீறாச்சு 
பொய்யும் மெய்யும் புலர்விருக்க
புடம் போட்டே மின்னுகிறது தங்கம்

பாவை என் முகம் பார்த்து
பால் நிலா ஒளிந்திருக்க
பார்த்தவன் மூடன்
பகலில் விளக்கெடுத்து வருகின்றான்

பாலுக்கும் கள்ளுக்கும் பேதம் புரியவில்லை
யாரை நோவேன் யார்க் கெடுத்துரைப்பேன்
நதி வழி சென்றே நாணல் ஆனேன்
பெண்ணுக் கழகு நாணம் என்றே 
பேதமை செய்கின்றார் 
பேதை என் செய்வேன்

பாவலர் வல்வை சுயேன்

mercredi 17 juillet 2019

அன்பும் அற நெறியும் !!!


அறிவுக்கு வேலை கொடு - அன்றேல்
அறியாமை உன்னை தின்னும்
அறியாமையின் ஆணிவேர் எங்கே என தேடினேன்
அது நான்தான் என கண்டு வெக்கித்துப் போனேன்

எண்ணக் கருக்கள் என் சிந்தனையில்
எங்கெங்கோ முளைத்திருந்தன
அதை அள்ளிப் பெருக்காது விட்டதினால்
தூர் வாரா நீர் குவளையத்தில் துர் நாற்றம் வீசிட
எத்தனையோ வெடிப்புக்கள் எனக்குள்ளே

மூளைச் சலவை அவசியம் என்கிறார் மருத்துவர்
சொட்டு நீலம் போட்டுத் துவைத்தால்
மின்னல் அடிக்கும் வெண்யாகும் என்கிறார்கள்
அமிலம் நிறைந்த அலம்பலான மூளையை
இனி என்ன போட்டு துவைத் தெடுப்பேன்

ஆயிரம் கோயில் சாமிக்கு இருந்தும்
அவனை நேரில் காணவில்லை
இரங்கல் மனு எழுதிப் போட்டேன், இறைவனுக்கு
இத்தனை காலம் எங்கிருந்தாய் என
எழுதிவிட்டான் என் மனுவுக்கு

மந்திரமான சுந்தரர் நீறெடுத்து
மங்கலக் குங்குமம் சேர்த்து குளைத்து
அமிலம் கொண்ட அங்கம் எல்லாம்
சிந்தை குளிர சிவாய நம என
எழுதினேன்
அபாயம் இனி இல்லை என
ஆட்கொண்டான் இறை என்னை

அறிவும் ஆற்றலும் அரு மருந்தல்ல
அது அள்ளக் குறையா களஞ்சியமே
அற்பணிப்புக்கள் இல்லையேல்
அன்பும் அற நெறியும் உரித்தாவதில்லை

பாவலர் வல்வை சுயேன்

vendredi 12 juillet 2019

கரிக்கின்றது உப்பு !!!


கரைகளை தொட்டுச் செல்லும் அலையே
நீ கடலிடம் சொல்லும் சேதி என்ன
என் மொழி நீ அறிவாய் 
உன் எண்ணம் நான் அறியேன்
வான்மழை தரும் நன்னீர் மேன்மை உற்றும்
மானுடன் சிந்தும் கண்ணீர் கரையை
தொட்டுச் செல்லும் உன்னால் 
உப்புக் கரிக்கிறது கடல்

நேற்றைய காற்றில் வீசப்பட்ட புழுதி நான்
கால சமுத்திரத்தை கடந்திட நீந்துகிறேன்
முடியவில்லை என்னால்
கன்னத்தில் வழியும் சங்கமத் துளியில்
பாவலர் வல்வை சுயேன்

mardi 2 juillet 2019

சயன மாளிகை !!!


 அழகே உன்னை எழுதும் மனசை 
இமைகளின் இறகுகள் வென்றதடி
அன்பு முத்திரை பதித்து பகிர்ந்திட
எழுதும் கோல் எழுதிய தென்ன 

சந்தங்கள் எழுந்தன சங்கீதம் கேட்கவில்லை 
சுரங்கள் பிறந்தன புல்லாங்குழல் ஓயவில்லை 
சயன அறை சங்கீதத்தில் 
சாரீர ஊஞ்சலில்
நடு ராத்திரி நகலாச்சு 
புலர்வின் ஒலியில் கதிரவன் எழுந்தாச்சு

முடிந்தது சிவராத்திரி ஒன்றுதானே
நவராத்திரி ஒன்பது இரவுகள்
ஒன்றின் பின் ஒன்றாய் 
கண் சிமிட்டி அழைக்கும் போதில்
இமைகளின் இறகால் மை எடுத்து வா
அழகுச் செல்வம் வரைவோம் அப்போ 
சயன மாளிகை திறக்கும் கதவு

பாவலர் வல்வை சுயேன்

jeudi 30 mai 2019

மாணவன் நீ !!!


மகரந்தக் கூடல் நடுவே வண்டுகளின் நடனம்
பூக்களுக்கு பிடித்த முத்தம்

கலைக் கூடத்தில் சிற்றுளியின் நடனம்
சிற்பிக்கு பிடித்த முத்தம்

பரீட்சை எழுதும் மாணவனே
நீ படிக்காத பக்கங்களில்
எஞ்சிக் கிடக்கின்றன முத்தங்கள்

படித்துக் கொடு நானும் படிக்கிறேன்
பக்கங்கள் எத்தனை படித்திடல்லாம்
ஆனாலும் மாணவன் நீ
என் அனுமதி இன்றி
புதிய பக்கங்களை புரட்டிவிடாதே

எழுத்தாளன் கொடுத்த பேனா முத்தங்களால்
முழுமை பெற்று ஆடை அணிந்திருக்கிறேன்
கற்பு என் காப்பகம் பொது உடமை அல்ல

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...