dimanche 19 décembre 2021

 

எவர்கிறீன் !!!

 அன்னை மடியில் எவர்கிறீன்

தந்தையின் நிழலில் எவர்கிறீன்

சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன்

பள்ளிச் சாலையில் எவர்கிறீன்

 துள்ளித் திரிந்தேன் எவர்கிறீன்

ஊருடன் உறவும் எவர்கிறீன்

ஏழ்மையும் தோழன் எவர்கிறீன்

இறை விஷ்வாசம் எவர்கிறீன்

 உழைப்பும் உயர்வும் எவர்கிறீன்

பொது நலம் எனக்குள் எவர்கிறீன்

நாயகி துணையும் எவர்கிறீன்

நாயகன் வடிவம் எவர்கிறீன்

 

அப்பா என்றார் எவர்கிறீன்

மாமா என்றார் எவர்கிறீன்

தாத்தா என்றார் எவர்கிறீன்

வாழ்ந்த காலங்கள் எவர்கிறீன்

 வாழ் நாள் முடிவை வரவேற்கும்

நரைத் திரைமீதிலும் எவர்கிறீன்

என்னில் ஊன்றிய சுவாசமே

உன் அன்புக்கு என் எவர்கிறீன்

 


பாவலர் வல்வை சுயேன் – 01.12.2020

jeudi 8 juillet 2021

 

வையகம் ஓங்குக !!!

 எனக்கு வேண்டும் எமக்கு வேண்டும்

புது யுகத்தில் மறு மலர்ச்சி

முடிந்த வாழ்வென மடிந்து சாவோமா

கடந்து செல்லும் பாதை நோக்கி

எழுந்து போகின்றேன்

 புறை ஓடும் பூங்காற்றே திரை நீக்குவேன்

வரைமுறை வாழ்விற்கு வழி தேடுவேன்

துயர் கூடி துடக்கி முடக்கி மூழ்கிடினும்

வேற்றடி வீழ்ந்து வெந்து சாவேனோ

 

ஆதி மொழியே எங்கள் தமிழ் மொழி

ஏடும் எழுத்தாணியும் தந்த, தாய் மொழி

ஆற்றலும் அறிவும் கூற்றும் குன்றா தொழுகி

மறை நூல் பற்றி மனமிசை பாடுங்கள்

தன்னிகர் தானுற்று தமிழ் ஓங்கவே

பாரினில் போற்றுவோம் செந்தமிழ் பாக்களை

தோற்றும் தலை முறை தொன்மை போற்றவே

எண்ணும் எழுத்தும் கண்ணென காண்போம்

 

வாழ்வியல் பேரின்பம் வளமுற வாழ்கவே

கைத்தலம் பற்றி நித்திலம் கொழித்தே

வான் துணை கூடி வையகம் ஓங்கட்டும்

மேன்மை கொள் தமிழே மேதினி ஆள்க நீ

 

பாவலர் வல்வை சுயேன் – 06.04.2021

lundi 17 mai 2021



 

நினைவேந்தல் !!!

 

மண்ணின் விடுதலை மண்ணிலே

புதைந்தது மே, பதினெட்டிலே

விடுதலை வேழ்வியில் யந்துக்கள்

விஷம் கொட்டியதும் மே, பதினெட்டிலே

இனச்சுத்தி கொலையில் இலெட்சம் தமிழர்

முள்ளியில் மூழ்கினர் மே,பதினெட்டிலே

 

விடுதலைக்கே தலை கொடுத்தோம்

விடுதலை இன்றியே வீழ்ந்தன தலைகள்

முள்ளி வாய்க்கால் முடிவும் அல்ல

முற்றுப்பெற்ற முகவுரையும் அல்ல

அன்னைத் தமிழால் அகம் உருக்கி

இன்னுயிர் உறவுகளை நினைவேந்தி

வணங்குவோம் இந்நாள் மே,18

 

கொடுநிலை வீழ்த்தி கொள்ளி இட்டோரே

அணையாத் தீ அகிலத்தின் இருப்பு

ஆணை இட்டு அணை இட்டாலும்

அலை என எழுவோம்

அக வணக்கம் செய்வோம்

நீதியின் விழியில் நீரோட்டம்

நிச்சயம் உலகம் செவி சாய்க்கும்

 

உலக மன்றிலே மனு வைத்தோம்

உரிமைத் தேசம் மீழ் பெறுவோம்

கருணைக் கண்கள் திறக்கிறது

கயவர் படை சிறை சேரட்டும்

 

தடைகள் உடைய தலை தருவோம்

தன்மான உயர்வுக்கு உயிர் தருவோம்

முள்ளிக் கடலே உரம் ஊட்டு

சுதந்திர தாகம் தணியட்டும்

முட்டும் பகை முடி அறுத்து

முழங்கு சங்கே விண்ணும் அதிர

 

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...