அதிகாலை புலர்வின் சூரியக் கதிர்கள்
மெல்லென எழுந்து
கூரை ஓட்டின் சாளரங்கள் ஊடே நுழைந்து
மூடித்திறந்த விழிகளுக்கு காலை வணக்கம் தந்தன
துயில் தந்த பாய் சுருட்டி ஓரம் வைத்துவிட்டு
காலை கடன்களை முடித்து
தலை வாசலில் வந்தமர்ந்தேன்
கதிரவன் வரவு கண்ட தென்னங் கீற்றுக்களும்
சென்டு பூக்களை ஜனனிக்கும் பூச்செடிகளும்
உள்ளம் மிகை பொங்க நர்த்தனங்களாடி
வாசல் வந்த கதிரவனுக்கு வாசனை தூவி
பூமித் தாய்க்கு பச்சை சேலை கட்டி
பல வர்ண யருகைகள் நெய்து
உள்ளப் பூரிகையுடன்
உறவுப் பாசம் ஊட்டி என்னை பார்த்தன
காலை எழுந்து என்ன செய்தேன் நான்
என்னைத் தாங்கும் தாய் நிலத்திற்கு
வெட்கித்தேன் வேதனை உற்றேன்
புன்னகை உலர்ந்த தாய் நிலத்தின்
கண்ணகை காணாது கலங்கினேன்
தேடலின் வாசல்கள் திறந்திருந்தும்
தனயன் என் பணி மறந்திருந்தேன்
உத்தரவுக்கு காத்திருக்கவில்லை
என் பாதங்கள்
மெல்ல நகரும் பாதம் கண்டு
உள்ளம் மிகை கொண்டு
விடிவைத் தரும் கதிரவனின்
ஒளி பற்றி செல்கிறேன்
நாளைய விடியலில்
நம் தேசம் புன்னகை பூக்கட்டும்
பாவலர் வல்வை சுயேன்