jeudi 29 mars 2018

மாலை வந்தனம் மலரிடம் நீ...


மாலை வந்தனம் மலரிடம் நீ சொல்லத்தானே – வெண்
நிலா வந்துனை சேர்ந்தது என் கண்ணாளா
இருள் மெல்ல வந்து இமைக் காவல் கொன்று 
விழி உற்ற நாணம் விலகிடத்தானே

நாலும் அறிந்து நான் உனை உடுத்தேன்
இதில் என்ன மாயமோ சிந்தையில் கோபமோ
கலங்கித் தெளிந்தேன் களவும் கற்றேன் கலங்கேனே
இருள் திரை சூழ அருள் மறை தந்தாய் அறிந்தேனே
பூத்துச் சொரிந்தேன் பூங்குழலானேன்
பருவப் பூ எனை பள்ளி அறை பார்த்தாய்
முன்னவர் முன்னே உன் எழில் எப்படி ஒளி நிற்பேன்

உயர் நிலை வீதியில் பகல் உலா விண் மதி
தனை உணர்ந்துதானே ஒளி முகம் தரவில்லை
எண்ணில்லா விழிகள் ஏதேதோ சொல்லும் இங்கே
கலாப மயிலாடி கண்ணசைவு தந்தும்
சரணாலையம் வரவில்லை சல்லாபம் கெள்ளவில்லை
மதி மயங்கா மதி அவளே மாறாப்பு சரியவில்லை  

கொஞ்சி கொஞ்சி கன்னம் சிவக்க சொல்லாததை உள்ளம் அள்ள
இன்பத் தூறல் நனைகின்றோம் குடைக்குள் மழை நீயா நானா
யாரடி கண்மணி ஊரிலே எவர்தான் கொஞ்சி மிஞ்சாதவர்
முத்து முத்தாய் முத்தச் சத்தம் நித்தம் சுவர்கள் நானைகிறதே     
தங்கமே தங்கமாய் உன் மூக்குத்தியாய் உயிர் வாழ்கிறேன்
கண் விழித்தவர் முன்னிலும் முத்தங்கள் தருகிறேன்
மௌனம் கலைக்காதே மற்றவர் அறியார் மாற்றங்கள் எமக்கில்லை
மாலை வந்தனம்
பாவலர் வல்வை சுயேன்

mardi 20 mars 2018

ஐயோ பத்திகிச்சு !!!


ஐயோ பத்திகிச்சு குறுநகை கொத்திகிச்சு விரகம்தான்
விடிந்தாலென்ன விடியட்டும் அல்லி அணைப்பில்
சந்திரன் இன்னும் விலகலையே
சாரீ.. ரீ.. ரீ.. மா.. பா..
ரீ.. ரீ.. மா.. பா.. த நீ சா..
நீ.. ரீ.. ரீ.. கரீரீ.. மா..
சா.. நீ.. தா.. ப.. வாமா..
சாரீ.. ரீ.. கம.. பதநீ.. நீ.. நீ.. நீதான்
சந்தோச சரசம் உல்லாச உலகம் கொஞ்சுதே
சம்சார வாழ்வுக்கு சந்நியாசம் தடையிங்கு போடுதே
சரீ.. ரீ.. ரீ.. கா.. ரீ.. ரீ.. மா.. பா.. ஐயோ..
தாழ்பாள் திறக்கிது யாரோ யரோ போடா போ

காலை மாலை பூக்கும் மல்லி நீயே நீயே
வாலிப வசந்த கோலம் நனைந்தேன் நானே நானே
முதுமையை தொடுமுன் முகவரி எழுத
உன்னிடம் வந்தேனே
அறுவடை காலம் அள்ளியே இடு
வன்முறை இல்லா வளர் பிறை நீ நீ
வானத்தை வளைத்த தீ பொறி நீ நீ
ஆறடி குவளையம் அருகிருக்கு
அதற்கு அதிபதி நீதான் திமிரெனக்கு
ஐயோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு

மார்கழி குளிராய் மனசிருக்கு மடை திறந்தோடிடும் வயசுனக்கு
ஆனந்த வாழ்வு நூறுவரை காலத்தின் தேவை காதவரை
பூவில் பனியே புல்லாங்குழலே பூபாளம் இசைத்திட வா வா
ஐயோ.. பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு      

பாவலர் வல்வை சுயேன்

அம்மா உன் அன்பன்றி அருட் காதலா !!!


அம்மா உன் அன்பன்றி அருட் காதலா
தெருக் கோயில் தெய்வங்கள்
உனக்கீடாகுமா

கருவில் உயிரூட்டி மொழியாகி நின்றாய்
உலகில் எனை ஈர்ந்து அருள் வடிவானாய்
உயிரே உன் உதிரம் பாலாக வார்த்தாய்
நோய் என்று வீழ்ந்தேன் விழி மூட மறந்தாய்
இமை இரண்டு இருந்தும் இமையாக காத்தாய்

அம்மா உன் அன்பன்றி அருட் காதலா
தெருக் கோயில் தெய்வங்கள் உனக்கீடாகுமா
படையாறு வீடு உனக்கில்லை அம்மா
உன் பசியாற்றி மடிதூங்க மகனானேன் தாயே
தேனுண்டு மகிழ்ந்தால் திகட்டாது தேகமே
தாயன்பு எனக்கு பாற்கடல் அமுதமே
உயிரே உயிர்தர வரமிங்கு தரவேண்டும்
நீ இல்லா உலகு எனக்கெதற்கு வேண்டும்

அம்மா உன் அன்பன்றி அருட் காதலா
தெருக் கோயில் தெய்வங்கள் உனக்கீடாகுமா

பாவலர் வல்வை சுயேன்

jeudi 15 mars 2018

வாசலிலே வாச மல்லி


கூரை வேஞ்சு குந்த வைச்ச ஓலை குடில் கோடியிலே
பந்தல் காலு நாலுதான்டி பாசமுள்ள என் பிறப்பே
புகுந்த வீடு வா எங்க பிறந்த வீடு தனியே விட்டு
போறாளே பெட்டை பிள்ளை
காயம் பட்ட வெள்ளச்சி போல

குமரி இங்கே சிறை இருந்தா
பாசம் எல்லாம் வேசம் என்பார்
குறும்பாடு சந்தைக்கு போனா
ஏலக் கூறு விரலில் சொல்வார்
என்ன விலை உன் பாசமடி
விலையேது நீ தங்கமடி
என்னுசிரே எங்கே இப்போ
உன் அண்ணன் கூடு தனிச்சிடுச்சே

காலையிலே சேவல் கூவ காதகத்தி நீர் தெளிப்பே
கறுப்பன் மாடு கத்துதேண்ணு காம்பழுத்தி பால் கறப்பே
ஏரெடுத்து நான் வயல் காடு போக
வாசலிலே, வாச மல்லி போலிருப்பே
உச்சி வெயில் வதைச்சாலும் கஞ்சி கொண்டு நீ வருவே
உள்ளங்கால் கொதிப்பினிலே உள்ளம் நொந்து உனை சுமப்பேன்
கொலு சொலி கேட்கலையே கோல மயிலே உன் ஆடலெங்கே

பாவலர் வல்வை சுயேன்

dimanche 11 mars 2018

மயக்கம் அல்ல மௌனமே !!!

வெள்ளை புறாவென அள்ளி போனாய் என் மனசை
நிறங்களின் தூரம் நொடிப் பொழுதின் முள்ளாய் சுற்றியும்
விருப்புத் துறவறம் கொள்ளேன் எங்கிரது இதயம்
இரவும் பகலும் நீயாய் இருந்து
இமை காவலையும் மீறி
மயில் தோகையாய் வருடுகிறாய்
மயக்கம் அல்ல மோன மலரே
மௌனமே...

பாவலர் வல்வை சுயேன்

vendredi 9 mars 2018

துச்சாதணன் தோற்றானடி ...


பட்டாடை களைந்து
துகிலாடை உடுத்திய
பூமி பெண்ணே...

அங்கம் மின்னுதடி
ஆதவன் வருகின்றான்
அணைத்திடத்தானே...

மெல்லினமும் புள்ளினமும்
வெட்கத்தில் விழி மூட
இடையினம் தேடி
அவன் உன் சேலை பற்ற
துச்சாதணன் தோற்றானடி
அபயம் கண்ணா என்றே
உன் நா உளறவில்லை
அவனும் பள்ளி அறையில்
பாமா ருக்மணியும்
பாகப் பிரிவினையில்

ஆதவன் அணைக்க நீ சிலிர்க்க
பசும் புல்லும் தலை நனைக்க
அரும் புதிரந்து மொட்டவிழ்ந்து
இளமை ஊஞ்சல் ஆடுகிறாய்

புள்ளினங்கள் விழித்ததினால்
மெல்லினம் உனை விலகி
அந்தி சாய்த்து அத்தசாமம் வாறேன் என்றே
அன்னம் தூதனுப்பி ஆரணங்கே போறான்டி

மஞ்சழ் பூசி குளித்து மதியில் தலை சீவி
விடி வெள்ளி முளைக்கும் முன்னே
வடிவழகே விழித்திரு
விடியலாய் வாறேன் எங்கிறான்
விடை கொடு பூமி பெண்ணே
விபரீதம் வேண்டாம் வேண்டாம்
தடை சட்டம் இன்னும் அமுலில் இருக்கிறது

பாவலர் வல்வை சுயேன்

jeudi 8 mars 2018

சிற்பி செதுக்கா பொற் சிலை


சிற்பி செதுக்கா பொற் சிலையே
சித்தம் சிதைந்தே சித்திரம் சிரிக்கிதடி
ஆடாமல் ஆடுகிறாய் ஆனந்தம் ஏதும் இல்லை
ஒளித் தூரிகை தீபத்தின்
எண்ணை இல்லா திரி நீயே
கொள் முதல் கொள்ளாமலே
உயிரே உயிரே என உடல் உரசி
கொள்ளை இடும் உலகிது தங்கமே
இல்லாத இளவு வீட்டில்
ஒப்பாரி கேட்கிதென்று இரங்காதே

சீதன கொள்வனவில் சீதா எங்கிறார்
சீர் திருத்தவானும் சேதாரம் சேர்கிறார்
தேடலில் உன்னருகே
எரியுதிங்கே சிகப்பு விளக்கு
கூடலில் நீயே குத்து விளக்கு
தயங்காதே தங்கமே
மாற்று குன்றா தங்கம் பெண்ணே

பாவலர் வல்வை சுயேன்

mercredi 7 mars 2018

அழியாத கோலம் எழுதாத பாடல்!!!

நோயில் வீழ்ந்து பாயில் துடித்து
அம்மா அம்மா என்றே
அழுதேனம்மா ....
எரியும் திரி ஒன்று
தன்னுதிரம் தனில் ஒளி ஏற்றி
எனை தாங்கி எரிகிறதே அம்மா
தாயே நீ இன்றி விழி நீர் மல்க
விரல் கோதி விழி துடைத்து
தன் மடி சுமக்கின்றாளே கோதை
அழியாத கோலம் எழுதாத பாடல்
இவளும் என் அன்னையே
எரியும் திரி ஒளியே
எனை தாங்கும் சுடரே
என் தாரமும் தாயும் நீயே
என் அன்னையை கண்டேன் உன்னில்

பாவலர் வல்வை சுயேன்

lundi 5 mars 2018

இச்சகத்தில் இதற்கேன்....


தீண்டத் தகாதெனும் தீண்டாமை ஒளிக – மனம்
தாண்டி பறக்கினும் மாசுறு களைக
தெளிவுறு தேடல் அங்கம் கொள்மிகையிலும்
பங்கம் உறா நிலை நீவி பார்க்கும் விழிகளே உய்க...

இடையும் கொடியும் சடையும் துடையும்
மடல் வாழை மச்சமும் புனையும் கவிகாள்
பரப்பளவு தேகம் பரிந்துரை கேட்கிறதே
இச்சகத்தில் இதற்கேன்
இன்னும் கவி இல்லை 

முப்பாலும் தந்த கம்பன் கவி படித்து
காளிதாசனும் கண்ணதாசனும்
எழுதா கவி எழுதி தாருவீர் காண்
அக்கவி வையகம் மெச்சும் எனில்
இப்பரப்பில் பச்சை குத்தி நாளை வாறேன்
தாண்டி பறக்கும் மனமே இறக்கை விரியாதே
மேனி பூக்களை தேனீக்கள் கடித்ததால்
காயம் ஆற காற்றுக்கு தூது விட்டேன்    

தீண்டத் தகாதெனும் தீண்டாமை ஒளிக – மனம்
தாண்டி பறக்கினும் மாசுறு களைக

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...