உயிரே உலகுரு தமிழின உள்ளொளியே
முது மொழி தமிழின் முக வடிவே
கார் மழை கூடலில் கார்த்திகை மலராய்
வங்க அலை தாலாட்டும் வல்வையிலே
அன்னை பார்வதி பெற்ற வடிவழகே பிரபாகரா
வானுயர்ந்து
பெய்யும் மழை நீ
நீ தந்த நீர் பொசிந்து
தழிர் கொண்டே
யாம் உமை
பாடுகிறோம்
அருள் ஞான வடிவே
உன்னடி முடி
தேடுகிறோம்
வரம் தந்து
தமிழீழம் காண வா தலைவா
சத்திய சோதனையின்
நித்திலமே
நீ இன்றி யாம்
வாழும் ஈழம் ஏதிங்கே
சூரியச் செல்வா சுதந்திர ஒளியே
அருள் வடிவான ஆரமுதே
நெடு நீழ் களம்தனில்
கொடும் துயர் களைந்தே
கருப் பொருளாணவன் நீ
அடர் வனக்காடும் அன்புடை தோழரும்
புடை சூழ் புலி படை கொண்டே
புறம் எரித்த
அறமே
உன் திருவடி தொழ
தேடுகிறோம் இறைவா
பிறந்தாய் நீ
பிறந்தோம் உமதூரில்
அரு மருந்தே நீ வாழியவே
வாழி
பாவலர் வல்வை
சுயேன்