முதுமை காணா இளமை
முக்காட்டில் நனைகிறது
வரன் வாங்க
வரதட்சணை வேண்டுமாம்
மௌனித்து அழுகிறது,
பெண்மை!
சாளரத் துளிகள் நனைக்கின்றன
துளிர்க்கிறேன் துவள்கிறேன்
துவட்டியும்,
தூவாணம் தொடுகிறது
துடிக்கிறேன்!
சந்தைக்கு போன தந்தை
மந்தை விலை கண்டு
மரணித்துவிட்டார்!
நிலாவே அனு தினம்
உன்னோடுதான் பேசுகிறேன்
என் வாசலில் ஓர் சந்திரனின்
வரவை எண்ணி பார்க்கிறேன்
விலை இல்லா மாளிகையில்
விடிவெண்ணி வாழும்
அவனும் நானும்
விற்பனைக்கு அல்ல!
பாவலர் வல்வை சுயேன்
துளிர்க்கிறேன் துவள்கிறேன்
துவட்டியும்,
தூவாணம் தொடுகிறது
துடிக்கிறேன்!
சந்தைக்கு போன தந்தை
மந்தை விலை கண்டு
மரணித்துவிட்டார்!
நிலாவே அனு தினம்
உன்னோடுதான் பேசுகிறேன்
என் வாசலில் ஓர் சந்திரனின்
வரவை எண்ணி பார்க்கிறேன்
விலை இல்லா மாளிகையில்
விடிவெண்ணி வாழும்
அவனும் நானும்
விற்பனைக்கு அல்ல!
பாவலர் வல்வை சுயேன்