samedi 30 septembre 2017

சிறுவர் உலகம்....

பட்டாம் பூச்சிகள் பறக்கிது பறக்கிது - சிட்டாய்
சிறகினை சிறிசுகள் விரிக்கிது விரிக்கிது
இது சிங்கார உலகம்தான்
சிறு மலர்களின் கொண்டாட்ட கலகம்தான்
கூ... க் கூ..., கூ... க் கூ... சுக்கு புக்கு சுக்கு புக்கு
இது கூட்சு வண்டிதான் கூ.....

தப்புத் தன்டா செய்திடுவோம் தண்டணை இல்லேங்க
முத்தம் கொஞ்சம் கொடுத்திடுவோம் வெட்கமும் இல்லேங்க
கோயில் கட்டி விளையாடி கும்பிடுவோம் நாங்க
நீங்க விளையாடி வளர்ந்ததை போலே பொம்மைகள் நாங்க
கோபம் இல்லே குரோதம் இல்லே வஞ்சமே இல்லே
வாங்க நீங்க போகலாம் நம்ம வண்டியில் ஊர்கோலம்
கூ... க் கூ..., கூ... க் கூ... சுக்கு புக்கு சுக்கு புக்கு
இது கூட்சு வண்டிங்க கூ....

பிள்ளைகளாய் இருந்திட வெண்டும் தொல்லை இல்லேங்க
பெரியவராய் வளர்ந்தவரே ஏன் சிரிக்க மறந்தீங்க
பள்ளி சென்று பாடம் படிப்போம்
கல்விப் பேறு அள்ளியே எடுப்போம்
கூட்சு வண்டியில் காத்திருக்கோம் ஒன்றாய் போவோமா
சின்னச் சிறகினை விரித்து வாழும் சிறாரின் உலகம்
கூ... க் கூ..., கூ... க் கூ... சுக்கு புக்கு சுக்கு புக்கு
இது கூட்சு வண்டி ஏறுங்க நீங்க கூ....
கூ... க் கூ..., கூ... க் கூ... சுக்கு சுக்கு சுக்கு சுக்கு

பாவலர் வல்வை சுயேன்

vendredi 29 septembre 2017

ஆயுத பூஜை வாழ்த்துகள்....

விழியிலே எம் தேவன் எழுதினான் வீர காவியம்
இனி அவன்போல் யார் தருவார் ஒளி பிரபாகரம்
ஒளி இழந்த விழிகள் ஊமையாய் துடிக்கின்றன
இது இதிகாசம் அல்ல ஈழ காவியம்
செய்யுள் விரித்து வரவிலக்கணம் தந்தான்
நேரில் வந்த ஆண்டவனே வேலுப்பிள்ளை பிரபாகரன்

பாவலர் வல்வை சுயேன்

jeudi 28 septembre 2017

சேதாரம் இல்லை தேனே...

விண் நிலா மண்ணிலே வந்ததே முன்னே விரும்பினேன் நிலவே
காலச் சுளற்சியில் கண்ணிலே தூசு கலங்கினேன் உயிரே
இடியும் மழையும் கொடியும் மின்னலும்
வரல்லாம் வந்ததே வானிலை அறிக்கை அன்பே
கலங்குமா நெஞ்சு கலங்கியே தெளிந்தது
வாழ்க்கை புயலில் அனுதினம் அள்ளினேன்
ஆதாரம் நூறே சேதாரம் இல்லை தேனே


பாவலர் வல்வை சுயேன் 

ஊடலும் கூடலும் உனக்காயிரம் !!!

உருகும் ஆதவன் உதயமாகிறான்
கண்ணா இது அவன் நாடகம்
கோகிலத்தின் கண்ணா கண்ணா
கோதை அறிவாள்
உன் மன்மத லீலையின் மன ஓவியம்
கூடலும் ஊடலும் உனக்காயிரம்
ஊடல் அறியான் ஆதவன்
அவனே உலகின் உயிர் ஊடகம்

பாவலர் வல்வை சுயேன் 

mercredi 27 septembre 2017

எரிகிறதே என்னுயிர் !!

உலகெலாம் உணர்ந்து உள்ளொளி பெருக்கி
அன்பால் அணைத்தேன் அணையவில்லை
உள்ளன்பை கொடுத்தேன் வாங்கவில்லை
தலைக்கு மேலே தாழ்மையின் வீழ்ச்சி
இதற்கு மேல் என் செய்வேன்
இனியும் வேண்டேன் இன்னுயிர்


பாவலர் வல்வை சுயேன்

vendredi 15 septembre 2017

தீர்க்க சுமங்கலி பவ

உயர்வினை எண்ணி போ உரிமை இழந்த ஊனம் உண்டேல்
விண்ணுயர்ந்த நட்சத்திரங்களும் உதிர் சாம்பலாகி
ஒளி மயம் இழந்தே போகும்

பாவலர் வல்வை சுயேன்

mercredi 13 septembre 2017

நான்கு கண்கள் கொஞ்ச நேரம் !!!

அழகனென்பார் அழகி என்பார் இத்தனை நாள் எங்கிருந்தார்
ஊரும் இல்லை உறவும் இல்லை இன்றநெற்றில் இதயம் என்பார்
ஆம்பல் தூபம் அழகிய பேச்சு ஆடைகட்டிய நிலாவென ஆனந்த உலா
நான்கு கண்கள் கொஞ்சநேரம் கொஞ்சும் முலாம் கொஞ்சம் கொஞ்சம்
அஞ்சேலென அருள்கூர்ந்து அள்ளிடுவார் அந்தரங்கம்
தென்றலென தொடாதே வரும் திங்களெல்லாம் தீதே
வா,சாந்தியும் வசந்தியும் நுண்ணிய வைரஸ்சே
கவசம் இல்லா சுவாச மிகையாலே
விசுவாசம் இல்லா வைரஸ் உன்னுயிர் தின்னும்
தாம் தினக்க ததிக்கினத்தோம் தோம் தோம்
தடுப்பரன் இல்லையேல் தம்பி தங்கைகளே
சாந்தி முகூர்த்தம் பிணத்துக்கித்தான்

பாவலர் வல்வை சுயேன்

vendredi 8 septembre 2017

நிலை கொள் மனமே...

நியம் தனை நிழல் கௌவிடும் நீரோட்ட மிகையினை யார் வெல்வார் நிலை கொள் மனமே தலை சாயும் வாழ்வும் தாழ்வும்

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...