அள்ளிக் குளித்து ஆடை அணிந்து
அல்லி உதட்டில் செங்காந்தள் தடவி
விழி நீள் ஓரத்தில் அஞ்சனம் தீட்டி
கொண்டை மாலையில் தேன் தளிராட
கூந்தல் மேகம் கூட்டி அணைத்து
கானக் குயிலே நீ கூவாவிடில்
பருவப் பெண்ணையும்
பார்ப்பார் எவரோ
வெள்ளிக் கொலுசொலியில்
சங்கீதம் கேட்டு
பட்டாம் பூச்சியாய் பறக்கிது மனசு
மின்னும் தாரகைகள் கேட்கின்றன
பூமியில் யார் அந்த நிலவென்று
அழகு பாதி ஆடை பாதி
அஞ்சன ஒளியில் புலரும் நிலவே
அடுக்களை தீயில் உருகும் பொம்மை நீ
ஒவ்வொன்றாய் திருடுகிறார்
உன்னிடத்தில் ஏதேதோ
இல்லை ஒரு பாதுகாப்பு
இதுதானா இறைவன் தீர்ப்பு
பாவலர் வல்வை சுயேன்