jeudi 6 novembre 2014

பஞ்சான தேகம் கண்டு மேகம் என்றார் ..


பஞ்சான தேகம் கண்டு மேகம் என்றார்
முத்தம் இடும் காத்து பந்தாடுகிறது என்னை
அலைகிறேன் அங்கும் இங்கும்
இராப் பொழுதிலும் நித்திரை இல்லை
சூரியனும் சந்திரனும் சபலத்துடன்
என்னை தொடுகிறார்கள்
துயரங்கள் முட்டுகின்றன
கோபக் கொந்தளிப்பில்
மின்சாரம் உற்று முழக்கம் செய்து  
கண்ணீர் மல்கிறேன் 
தாவரங்கள் தாவி முத்தம் தந்து
ஒத்தடம் இடுகின்றன
பாவி மனிதா நீ மட்டும் என்னை நிந்திக்கிறாய்
ஏன் இத்தனை வெள்ளம் என்று
எந்த நாளுமா வருகிறேன் உன்னிடம்
என்றோ வருகிறேன் என் துயரங்களை சொல்லி ஆற
உன்னைப் போல் நான் தினமும் அழுவதில்லை ..
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...