இதய ஒலி கேக்கிறதா..
ஒளி ஏந்தி வந்துள்ளீர்கள் எமதுறவே
விழி நீர் சிந்தாதீர்கள் விடியலுக்காகாது
பாச நேசங்களை பற்றறுத்து
பாதியில் போகவில்லை நாங்கள்
உமக்காகவே போராடினோம்
உதிரம் சிந்தினோம்
உயிரையும் தந்துவிட்டோம்
உளமாற மகிழ்கின்றோம் உங்களை பிரியவில்லை
இன்னும் விடியவில்லை இடர் காட்டில் நீங்கள்
முள்ளி வாய்க்கால் முற்றுப் புள்ளி அல்ல
விடியல் வென்றால் வந்தெமை எழுப்புங்கள்
நாம் நித்திரை அல்ல
தாய் மடியில் கொஞ்சம் இளைப்பாறுகின்றோம்
தாலாட்டுகிறாள் எங்களை தமிழீழத் தாய்..
Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...