mardi 29 mai 2018

எழுதாத எஸ் எம் எஸ் !!!


மலர் தூவி சாய்கிறேன் மலரே நீ என்னில் சாய்கிறாய்
இலக்கை தொடுவது இதயம் என அறிந்தும்
இதுவரை தொடாமல் விட்டுருந்தேன்
ஏஞ்சல் நீயடி என்னுயிர் நீ என்பேனா

எழுதாத எஸ் எம் எஸ்சில்
என்னை நீ கிள்ளுகிறாய்
உன்னை நான் தொடுவதற்கும்
மயிலிடம்தான் இறகெடுத்தேன்
சரீரமோ சாகித்தியமோ
ஒன்றே ஒன்றானது இருவருக்கும் 

தரையில் நெருப்பின்றி தண்ணீரில் எழுத்தின்றி
லேஸ்சர்ரினால் என்னை செதுக்கிவிட்டாய்
உன் ஈர்ப்பு விழிகளுக்குள் ஈர் துளியாய் வீழ்ந்துவிட்டேன்
இமைகளால் தாழ் பூட்டி சிறையிட்டு சென்றுவிடு

பாவலர் வல்வை சுயேன்

lundi 28 mai 2018

நிறங்கள் இன்னும் தீரவில்லை !!!


 என்னை மீட்டும் கலை வாணியே
உன்னை தீட்டும் ஓவியன் நானே
எந்தன் நெஞ்சில் நீ ஏழு ராகம்

உலகச் சிற்பம் வெல்ல வல்ல
சித்திரம் கண்டு
கொஞ்சும் தென்றல் அஞ்சுதடி
தொட்டணைத்து தீட்டுகிறேன்
நிறங்கள் இன்னும் தீரவில்லை

ராஜ ராஜ சோழனின் வம்சம் நாமே
இன்ப வானில் இறகு விரித்து
தஞ்சை கோபுர கலசம் செய்வோம்
உலக அதிசயம் உரு மாறும் போதில்
உன்னையும் என்னையும் எழுதும் காவியம்

பாவலர் வல்வை சுயேன்

dimanche 27 mai 2018

முடியாத இரவுகள் !!!


 இனியவளே கோவை இதழ் கொடியே  
முன்னே என்னை காட்டும் கண்ணாடி நீ

உனக்குள் இருந்தேன் நான் இடம் தேடி
முடியாத இரவுகள் முன் கோப ஜென்மமடி
தொடாத பாகங்கள் விழி உண்ணும் நேரமடி
கை வளை ஓசை குலுங்கிட வா வா வா
மன்மதன் மார்பின் ரதியே

தேன் மலரே மலரிதழ் கனியே
மலரிதழ் எங்கும் பனித்துளி முத்தம்
இதழ்களாலே இதழ் துளி எடுத்து
தூரிகை செய்வோம் வா வா வா..
பொதிகை மலரே பூந் தென்றல் கொடியே
தின்றாலும் தீராதடி இந்த இனிய சுகம்

பாவலர் வல்வை சுயேன்

samedi 19 mai 2018

மனம் கொத்தி பறவை !!!


வண்ண நிலா வந்த திங்கே
தென்றலை தூதனுப்பி
தென்னங் கீற்றும் தலை ஆட்டுதடி
வெண் முகிலே உனை பார்த்து
ஈரம் இல்லா முத்தம் எங்கும்
மழை தூவி சாய்கிறேன்
மனம் கொத்தி பறவையே
என்னை,
எங்கோ அழைத்து போகிறாய்
இனி ஒரு ஜென்மம் பிறந்தாலும்
மறந்துவிடாதே என் முகவரி

பாவலர் வல்வை சுயேன்

dimanche 13 mai 2018

அகிலம் போற்றும் அன்னையர் தின வாழ்த்துகள்


அன்னை உன் திருவடி சரணம் சரணம் தாயே
ஆத்மாவெனும் அருவுருவும் உன் கரு உயிரே
இகபரம் காண ஈன்றெமை வைத்தாய்  

ஈடில்லா ஜனனமும் உடலுறு தோற்றமும்
உன் வயிற்று சிசுவே
ஊனொடு உயிரும் உடலுமாகி
எமதுறு வாழ்வில் ஏற்றமும் இறைத்து
ஏது பிழை நாம் செய்திடினும்
ஐயம் நீக்கி அறிவொடு அன்பும் தந்து
ஒரு நிலையாகி திருவுளம் கனிந்திடும்
ஓங்கார வடிவே உன் திருவடி பணிந்தோம்

ஔவியம் பெருக்கி அருட் கடல் நீந்தி
ஃஅகிர் தினையான அரிய வாழ்வினில்
அனு தினம் அகல் ஒளி தரும் தாயே
நின் பாதம் தொழுகின்றோம் யாமே
அகிலம் போற்றும் அன்னையர் தினம்தனில்
சரணம் சரணம் அம்மா ஆதி சக்தி நீயே

பாவலர் வல்வை சுயேன்

jeudi 10 mai 2018

இச்சைக் கிளியே திரும்பிவிடாதே !!!

பொய் இழை புனைந்ததேன் உன் ஜாடை
மெய்யன்பு முள்ளாச்சே என் இதயத்தில்
பொன் பொருள் தேடி உருகினேன் 
பள்ளியறை பாவைக்கல்ல
அரியணைத் துணை அரசி உனக்கே உனக்கென
பகலிரவு நனையும் உன்னிதழென அறியேனடி
கரம் பற்றிய தொருவன் காமத்துக் கொருவன் 

சிகப்பு விளக்கே
உன்னை
குத்துவிளக்கென நினைந்தேனே
இலவம் பஞ்சல்ல இதயம் வெடித்ததடி
இனித்திட்ட நாடகளும் உப்புக் கரிக்கிதடி
இச்சைக் கிளியே திரும்பிவிடாதே
இல்லறம் பொய்த்ததடி

பாவலர் வல்வை சுயேன்

dimanche 6 mai 2018

அம்மா உன் அன்புக்கிணை !!!


அன்பு மழை பொழியும் அம்மா அருகிருந்தும்
அவளும் சும்மா என்றேன் அவள் பிள்ளை

அன்னை உன்னை கண்கள் கனன்று
காணாத் தூரம் கடிதென நொந்தே  
நலிந்து நலம் குன்றி
வறண்ட குளமாகி நெஞ்சம் துடித்தேன்

நெடிய துயர் கூடி குறை கழலோதி
கண்ணெதிரே காணும் தெய்வம்
அன்னை உனை அன்றி
அவணியில் வேறில்லை அம்மா

இப் புவியில் ஈடேதம்மா

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...