jeudi 28 décembre 2017

கருணை கடவுள் வருவானா....

உலக மேடை உறுழுது உறுழுது
இறுதி மூச்சு எப்போ தெரியலே
சுருதி ஏத்தி சுரங்கள் பாடு
நீயோ நானோ முன்னே பின்னே..

அம்மா அப்பா பொம்மைகள் செய்ய
இறைவன் உசிரை கொடுத்தான்டா
பாசம் மோசம் வேசத்தினால்
வெந்து நூலாய் போனேன்டா
உறவும் உசிரும் ஒன்றே என்று
கொள்ளை போனது உள்ளம் தான்டா...

உறவை பிரிச்சு வரவை பாக்கிறார்
வங்கி வைப்பிலே பாசம் கொள்ளுறார்
ஏரிக் கரையும் எரியுதடா
நீரில் மீனே அவியுதடா
சரணம் சேரா பல்லவி கூட
மரணக் குழியில் போச்சேடா...

ஆறில்ச் சாவு நூறிலே சாவு
உசிரின் இருப்பிடம் எங்கே தெரியலே
கூட்டிப் பார்த்தேன்
கழித்தும் பார்த்தேன்
சம நிலை ஏதும் சரியா தெரியலே
உசிரை கொடுத்தவன் எங்கே இருக்கான்
ஏன்டா கொடுத்தான் எனக்கு புரியலே
கருணை கடவுள் வருவானா
தேடி பார்க்கிறேன் கிடைச்சா,
சொல்லுடா....

பாவலர் வல்வை சுயேன்

lundi 25 décembre 2017

பாலன் யேசு....


பிதா பரிசுதன் பாலன் யேசு
பூமியில் வந்து பிறந்தாரே
நத்தார் தினத்தில் நலங்கள் பெற்று
இறையருள் பாதம் தொழுவோமே
நாம் இறையருள் பாதம் தொழுவோமே

மார்கழி திங்களில் மாட்டுத் தொழுவத்தில்
ஏழை குடிலில் இறை பிறந்தார்
எல்லா ஜீவனும் ஒன்றே என்றே
தூய ஞான ஒளி ஏற்றி
தன்னையே தந்தார்

ஒளி தரும் தீபங்களே வென்றாடுங்கள்
விழிகளால் தூய ஒளியினை ஏந்தி
அகம் சேருங்கள்...
குற்றம் அற்றோர் இல்லை என்றே
அறிவற்றோர் கண்களை திறந்து வென்றார்
யேசு அன்பால் தீமையை அகம் எரித்தார்
உனக்கெது வேண்டுமோ
கொடு கொடு அதையே
பிறருக்கும் கொடு என்றார்
கயமையாளர் கட்டி அடித்தும்
மறு கன்னமும் காட்டி முகம் மலர்ந்தார்
மாசுள்ளோர் மமதையை புதைத்து புலர்வு தந்தார்  

முள் முடி ஏந்தி சிலுவை சுமந்து உதிரம் சொரிந்தாலும்
மூன்றே நாளில் மீழ் உயிரேற்று அருள் புரிந்தார்
தேவன் யேசு அருள் புரிந்தார்
வணங்கியே வாழ்வோம் தேவனின் பாதம்
போற்றியே பாடுவோம் பலனின் வேதம்
வாருங்கள் தோழர்களே, நாம் கொண்டாடுவோம்
நத்தார் வைபோகம்....

பாவலர் வல்வை சுயேன்

mercredi 20 décembre 2017

அருந்ததி அறியேன் ...

நெஞ்சம் அள்ளும் நீரலையும் கானமழை பொழியும்
ஆசையிலே நனைந்தால் நெஞ்சுக்குள்ளே சிலிற்கும்
ஓர விழிச் சிற்பமே எனை நீ சிதைச்சே
சிற்பி தந்த பொற் சிலையே
சிந்தனைய கலைச்சே

அடை மழை காலம் அருந்ததி அறியேன்
இருட்டினில் தானே பெட்டகம் திறந்தேன்
விரல்களினாலே விழிகளை மறைத்தே
தொடத் தொடத்தானே
நனையிறேன் நானும்
தனிமரம் கண்டு தழிரினை நனைத்து
புது மலரென்னை கிள்ளி பார்க்கிறாய்
காமன் அறைக்கே கோலம் இடுகிறாய்
ஏடகத்தின் வாசல் எனை மறித்தாலும்
உன் மடல் போதும் கம்பனை காண்பேன்

விடி வான வெள்ளி விழித்திட்ட போதும்
அடி வான ஒளிக்கு இருள் தூவி மறைப்பேன்
இமை காவல் உடைத்தே உயிராவேன்
உன் உள்ளக் கோட்டையில் தினம் வாழ்வேன்

பாவலர் வல்வை சுயேன்

lundi 18 décembre 2017

வாசலிலே அழைப்பொலி !!!

நீலச்சேலை கட்ட மறந்தாள்
முகில் திரை மூடி
முத்தம் தரும் மங்கை

வெட்கம் அறியா ஏரிக்கரை கிளிகள்
ஆடை கட்டி கூடு திரும்பின
வாசலிலே அழைப்பொலி கேட்டு
மெல்லத் திறந்தேன் ஜன்னலை
உத்தரவின்றி உள்ளன்போடு
உதட்டில் முத்தம் கொடுத்தாள்
வெண்பனி பாவை !
முற்கள் இல்லா பஞ்சணையின் கத கதப்பில்
உதடுகள் சிதைந்து ரெத்தம் சிந்தியது !
உச்சிமுதல் பாதம்வரை
பாதுகாப்பு கவசம் அணிந்துவிட்டேன்
உத்தரவாதம் இல்லா குளிர் நங்கையுடன்
கூடுதல் கூடாதென்பதற்காகவே... ....

பாவலர் வல்வை சுயேன்

jeudi 14 décembre 2017

தேவ தேவா உன் தேவி இங்கே ...

வாழ்வும் தாழ்வும் ஏன்தான் அன்பே
வாழ்வோம் வா
வாசம் போகா வாடா மலர்
உன் தோழில் சேரத்தான்
தேவ தேவா உன் தேவி இங்கே
வாழ்வும் தாழ்வும் ஏன்தான் அன்பே
வாழ்வோம் வா....

மாலை சூடும் மணநாள்
மரணத் தேதி பார்ப்பதோ
வேதம் ஓதும் வேதியர்
வேண்டித் தவம் கிடப்பதோ
உந்தன் குயில் பாடுதே
எந்தன் குரல் கேட்கிதோ
மஞ்சம் கண்டு கொஞ்சத்தான்
மலர்கள் இங்கே பூர்க்கிதே
கோதும் விரல் இன்றித்தான் கேசம்
வாடும் கன்னம் தழுவி ஏங்கிதே
மீட்டும் விரலேவா வீணை அழைக்கிதே
தேவ தேவா உன் தேவி இங்கே
வாழ்வும் தாழ்வும் ஏன்தான் அன்பே
வாழ்வோம் வா....

தேனை தேடும் வண்டுகள் தேகம் மெல்ல கடிக்கிது
வாழ்வும் வளமும் காணத்தான் வாசல் இங்கே திறக்கிது
மனங்கள் ரெண்டும் சேர்ந்திட மாலை தென்றல் வீசுது
மனமும் மனமும் ஒன்றிய நாணல் இங்கே ஓடுது
உதயம் இல்லா விழிகளே விழிகளே
உறவில் விரிசல் வீழ்ந்ததேன் வீழி காய்ந்ததேன்
வர்ண்ணம் குலைந்த ஓவியமோ வாராய் கண்ணா
தேவ தேவா உன் தேவி இங்கே
வாழ்வும் தாழ்வும் ஏன்தான் அன்பே
வாழ்வோம் வா
வாசம் போகா வாடா மலர்
உன் தோழில் சேரத்தான்...

பாவலர் வல்வை சுயேன்

vendredi 8 décembre 2017

அறிவேண் அனலே !!!

கருப் பொருளான கவிதை நீ
அலை கடல் மீதிலும் ஓடம் நீ
அன்பெனும் அறிவுடமை அழி நிலையாகி
தாழ்வுறு பேதமை பெருஞ் சுவராகினும்
தகர்வது தணலினில் எரியும் கூடே
குணமெனும் குன்றாய் விளங்கும் அருவே
அழி நிலை உனக்கேது தீ அள்ளி இட்டார்க்கே
அறிவேன் அனலே...


பாவலர் வல்வை சுயேன்

vendredi 1 décembre 2017

காத்திருக்கேன் கண்ணா !!!

எனக்குள்ளே எனக்குள்ளே
என்னாச்சு என்னாச்சு
ஆசைத் தூரல் மெல்ல மெல்ல    
விரகத் தீயில் கொல்லுதே....

மனு நீதி காத்திட வா வா நீ வா
விடியலும் உட் புகாமல் யன்னலைச் சாத்து
கரு விழி நான்கும் கலர்ப் படம் காணுதே
இதழ் ரசம் தானே இரவுக்கு ஆகாரம்
நான்கிதழ்களால் நான்மறை எழுதுவோம்
காலம் கரைவதேன் காத்திருக்கேன் கண்ணா


பாவலர் வல்வை சுயேன்

dimanche 26 novembre 2017

தமிழரின் இறைவனுக்கு அகவை 63

உயிரே உலகுரு தமிழின உள்ளொளியே
முது மொழி தமிழின் முக வடிவே
கார் மழை கூடலில் கார்த்திகை மலராய்
வங்க அலை தாலாட்டும் வல்வையிலே
அன்னை பார்வதி பெற்ற வடிவழகே பிரபாகரா

வானுயர்ந்து பெய்யும் மழை நீ
நீ தந்த நீர் பொசிந்து
தழிர் கொண்டே
யாம் உமை பாடுகிறோம்
அருள் ஞான வடிவே
உன்னடி முடி தேடுகிறோம்
வரம் தந்து தமிழீழம் காண வா தலைவா
சத்திய சோதனையின் நித்திலமே
நீ இன்றி யாம் வாழும் ஈழம் ஏதிங்கே

சூரியச் செல்வா சுதந்திர ஒளியே
அருள் வடிவான ஆரமுதே
நெடு நீழ் களம்தனில்
கொடும் துயர் களைந்தே
கருப் பொருளாணவன் நீ
அடர் வனக்காடும் அன்புடை தோழரும்
புடை சூழ் புலி படை கொண்டே
புறம் எரித்த அறமே
உன் திருவடி தொழ தேடுகிறோம் இறைவா
பிறந்தாய் நீ பிறந்தோம் உமதூரில்
அரு மருந்தே நீ வாழியவே வாழி       


பாவலர் வல்வை சுயேன்

vendredi 24 novembre 2017

என்னை மன்னித்துவிடு 🌷

அழகே உன்னெழில் காணத்தானே
புத்தகத்தில் குடி வைத்தேன்
மாதங்கள் வருடங்களாகிட
மனப்பால் குடித்திருந்தேன்...
முலை ஊட்டிகளே
குட்டி போடும் என்றார்
ஆசிரியர்!

உன் வண்ணம் கண்டே
ஆசை கொண்டேன்
மயிலே மயிலே
என்னை மன்னித்துவிடு
எண்ண இறகை உதிர்த்து
உன் வண்ண இறகை
உன்னிடமே தந்துவிட்டேன்

பாவலர் வல்வை சுயேன்

mardi 21 novembre 2017

விற்பனைக்கு சவப் பெட்டி.....

கடை ஒன்று திறப்பு விழா
விற்பனைக்கு சவப் பெட்டி
அழைப்பிதழ் வைத்து
அழைக்கிறான் அன்பு நண்பன்
என்னென்று வாழ்த்துரைப்பேன்

தினம் தினம் ஊரில் விழும்
சாவை எண்ணி
சந்தோசம் காணும் தொழில்
மனம் கூச மண்ணை பார்த்து
கடை வாசல் ஏறினேன்
புன்னகை புரிந்தான் தோழன்
கண்ணகைத்தேன் காணவில்லை போலும்
கட்டப்பட்டிருந்த றிப்பனை வெட்டச் சொன்னான்

ஒரு கணம் இதயம் ஊடறுந்து உளறாதே என்றது
மங்கலம் உண்டாகட்டும் என்று எப்படி சொல்வேன்
றிப்பனை கத்தரித்து உச்சரித்தன உதடுகள்
கலகலவெனவே கல்லாவில் வாசம் செய்வாள் லக்ஷ்மி
இதில் நான் என்ன நீ என்ன ஆறோ நூறோ தோழா
இறுதியாய் உறங்கிச் செல்வேன் உன் கடை பெட்டிக்குள் என்றேன்
ஆரத் தழுவி முத்தம் இட்டு உத்தரவென்றான் அன்பு நண்பன்


பாவலர் வல்வை சுயேன்

samedi 18 novembre 2017

பாரியின் வம்சம் நீ ...

பகலிலும் ஒளிரும் பதுமையே
கரு விழி கலந்தாய் பாலமுதே
ஏழு கடல் ஏறி ஓடி வந்தேன் நானே
உன் கால் தடம் கண்டே கரையினை தொட்டேன்

கொலு சொலி சொல்லும் உன் பெயர்தானடா
மெட்டி வளைவிலும் ஒட்டியே நிற்கிறாய்

போதும் எனக்கிந்த வதிவிடம் தேவி
போ என்று தள்ளாதே
போகுமிடம் அறியேன் நானே  

நாழிகை நொடிக்குள் துடிக்கிதே இதயம்
தின மணி முள்ளாய் சுற்றியே வாறேன்
விண் மேகம் உரசும் மின்சார கதிரே
இடி ஓசை வரும் முன்னே
மடி சாய்ந்தேன் நானே நானே
உதயம் வரும்வரை உறங்காமல் கொடு கொடு
உன் பேர் சொல்லும் பிள்ளை பெற்றே நான் தாறேன்

கணையாழி தந்தேனடி கலங்காமல் காத்திரு
துஷ்யந்தன் அல்ல நான் துவளாதே தூவானம் அடிக்கிது

உன் தேகம் எனக்கு தேக்கம் தோப்பே தோப்பே
என்னை படர வைத்தாய் நீ பாரியின் வம்சமே

களம் காணும் மன்னா உன் தேரோட்டி நானே நானே
என் புருவ வில்லேந்தி கொன்று வா பகைவனை
சாம்றாட்சிய வாழ்வில் சந்தோசம் காண்போமே


பாவலர் வல்வை சுயேன்        

jeudi 16 novembre 2017

வாசலிலே அழைப்பொலி !!!

முகில் திரையாலே முத்தம் இட்டாள்
நீலச்சேலை கட்ட மறந்த மங்கை
வெட்கம் அறியா ஏரிக்கரை கிளிகள்
ஆடை கட்டின !
வாசலிலே அழைப்பொலி கேட்டே
மெல்லத் திறந்தேன் ஜன்னலை
உத்தரவின்றி உள்ளன்போடு
உதட்டில் முத்தம் கொடுத்தாள்
வெண்பனி பாவை !
முற்கள் இல்லா பஞ்சணையின் கத கதப்பில்
உதடுகள் சிதைந்து ரெத்தம் சிந்தியது !
உச்சிமுதல் பாதம்வரை
பாதுகாப்பு கவசம் அணிந்துவிட்டேன்
உத்தரவாதம் இல்லா குளிர் நங்கையுடன்
கூடுதல் கூடாதென்றே... ....

பாவலர் வல்வை சுயேன்

lundi 13 novembre 2017

வாசம் போகும் வாழ்விலே....

வட்டமிடும் கழுகின் முன்னே அலை தட்டும் ஒலி கரையினிலே
இருளும் ஒளியும் விழி சூழ வாழ்ந்தே வாழ்வு இறக்கிறது
வாசம் போகும் வாழ்விலே, மாயும் மனமே நீ ஓய்வெடு....

பாவலர் வல்வை சுயேன்

dimanche 12 novembre 2017

விதி என்றால் விடைகொடு!!!

ஈர் உடல் ஓர் உயிர் ஒன்றாய் ஒன்றிட
காதலும் காமமும் சங்கமம்
காதல் ஊன்றி காமம் ஊன்றேல்
மோகத் திரையில் சங்கமம்
விதி என்றால் விடை கொடு விழியே
மதி இங்கு வெல்லாது மனசே
மாமரத்து பூவிலும்
மகரந்தம் மனம் கனிந்தே விழ்கிறது

பாவலர் வலவை சுயேன்

vendredi 10 novembre 2017

என்னை தொடு நிலாவே!!!

விழியில் ஒளியாய் நுளைந்தாய் நிலாவே - மென்
விரல்களிலே உன் புருவம் கண்டே உயிர் கலந்தேன்
உன்னை தொட்ட நீலாம்ஸ்றோங்
இன்றில்லை என்றால் என்ன
நிலாவே என்னை தொடு
உனக்காக விண்ணுக்கும் மண்ணுக்கும்
தொடர் பாலம் கட்டுகிறேன்
பா எழுதும் பாவலர்கள் பருவம் பார்த்து
உன் கன்னத்தில் முத்தம் இட்டால் என்ன,
கலங்கேன்
விண் முகில் இறகெடுத்து விளையாட வாறேன் நானும்
என்னுயிர் உள்ளவரை என்னவள் நீயே... ....

பாவலர் வல்வை சுயேன்

jeudi 2 novembre 2017

ஏர் முனை இல்லையேல் !!!

வான மழை பெய்யாதோ என
பூமி உடைந்து விண் நோக்க
விதைந்த நெற்கள் வரப்புயர் வின்றி கூனி குறுக
ஏர் முனை பதிந்த நிலம் ஏற்றம் இன்றி எரிகிறதே

வாராதோ மழையென வாடி உளவன் நொந்தும்
வர்ணன் வாராதிடத்தில் வந்து போன அரசு
வழங்கிச் செல்கிறது மரணச் சன்றிதழ்
எள்ளி நகை செய்யாதீர்
ஏர் முனை இல்லையேல் நீயும் இல்லை

பாவலர் வல்வை சுயேன்

jeudi 26 octobre 2017

நான் உன் அன்னையடி!!!

மகுடம் விட்டு வீழ்ந்தாய் மடி தாங்கி அணைத்தேன்
கன்னம் வைத்து கன்னத்தில் முத்தம் இட்டாய்
உடல் பொருள் உயிராகி கரையென கரங்கள் நீண்டன
ஏதேதோ மயக்கம் எங்கெங்கோ தயக்கம்
ஓட்டத்தை நீ நிறுத்தவில்லை
ஊராரும் உற்றாரும் உன் உச்சி மோந்தனர்
வயல்களும் மலர்களும் மாந்தோப்பு குயில்களும்
உனக்கே உனக்கென காதல் கடிதம் கொடுத்தன
கற்பு நெறி காத்து களங்கம் அற்ற கன்னியாகவே
கடலில் கலந்து சல்லாபம் செய்தாய்
கங்கையே நான் உன் அன்னையடி...

பாவலர் வல்வை சுயேன்

mercredi 25 octobre 2017

கண்ணீர் அஞ்சலி....


ஆழ்ந்த இரங்கல் ஐயன் குறளோவியனுக்கு...
அன்புடையீர் ஐயனே இடி வீழ்ந்த செய்தியானது என் செவிகளில் தங்களின் மறைவு, என் வாழ்வில் நான் கண்ட பண்புடை பாவலன் நீங்கள், என் இலக்கிய பயணத்தில் ஓராண்டுகள் என்னை வளி நடத்திய சான்றோன் நீங்கள், திருக் குறளை திரு மந்திரமாய் செப்பும் தன்மானத் தமிழன் நீங்கள், தங்களின் அன்பு மொழிதனை இனி என்று கேட்பேனையா.. விழி நீர் விடை தேடி சொரிகிறது தாய்த் தமிழ் பற்றாளனை துலைத்துவிட்டேனென்று.... இதயம் துடிக்க எதையும் தேடுங்கள் இதையும் ஏற்றுக் கொள்ளுங்கள் எனும் தங்களின் அன்போசை ஒலி கேட்கிறது, ஆலயம் செல்ல மறுத்து தங்களின் ஆ
த்மாவுடன் இணைகிறேன் ஐயா... ஐயனே தங்களின் ஆத்மா சாந்தியுறுக, ஓம் சாந்தி சாந்தி சாந்தி....
பாவலர் வல்வை சுயேன் எனும் பெயரை எனக்கு சூடித் தந்த பெருந்தகையே நீங்கள்தானே... அன்புடையீர் ஐயா அன்புடன் உங்களின் பாவலர் வல்வை சுயேன்

vendredi 20 octobre 2017

இமைகளின் இதழ் முத்தம்...

இரவின் கண் இளைப்பாற மடல்கள் செய்தன மௌனம், ஆதவன் எழுந்து வரவு செய்ய கலைந்தன இமைகளின் இதழ் முத்தம்....

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...