உலக மேடை உறுழுது
உறுழுது
இறுதி மூச்சு
எப்போ தெரியலே
சுருதி ஏத்தி
சுரங்கள் பாடு
நீயோ நானோ முன்னே
பின்னே..
அம்மா அப்பா
பொம்மைகள் செய்ய
இறைவன் உசிரை
கொடுத்தான்டா
பாசம் மோசம் வேசத்தினால்
வெந்து நூலாய்
போனேன்டா
உறவும் உசிரும்
ஒன்றே என்று
கொள்ளை போனது
உள்ளம் தான்டா...
உறவை பிரிச்சு
வரவை பாக்கிறார்
வங்கி வைப்பிலே
பாசம் கொள்ளுறார்
ஏரிக் கரையும்
எரியுதடா
நீரில் மீனே
அவியுதடா
சரணம் சேரா
பல்லவி கூட
மரணக் குழியில்
போச்சேடா...
ஆறில்ச் சாவு
நூறிலே சாவு
உசிரின்
இருப்பிடம் எங்கே தெரியலே
கூட்டிப்
பார்த்தேன்
கழித்தும்
பார்த்தேன்
சம நிலை ஏதும்
சரியா தெரியலே
உசிரை கொடுத்தவன்
எங்கே இருக்கான்
ஏன்டா கொடுத்தான்
எனக்கு புரியலே
கருணை கடவுள்
வருவானா
தேடி
பார்க்கிறேன் கிடைச்சா,
சொல்லுடா....
பாவலர் வல்வை
சுயேன்