mardi 14 octobre 2014

ஒத்தை மரமாய் நான் தனித்திருக்க நித்தம் என் நிழல் வந்தவனே ..



ஒத்தை மரமாய் நான் தனித்திருக்க
நித்தம் என் நிழல் வந்தவனே
சாய்ந்தாடத் தோள் தந்தேன்
ஆடும்வரை ஆடி
இளந் தளிர் பூப் பறித்து
பட்டமரம் என விட்டுச் சென்றாய் என்னை     
 
இலையுதிர் காலம் தெரியாதோ நோக்கு
வசந்த காலத் தழைகள் கண்டு மீண்டும்
பூப்பறிக்க வருகிறாய் கரம் கொண்டு
விட்ட குறை மீதம் இருக்க
தொட்ட குறை ஏதடா என்னிடத்தில்
தொடராதே தொலை தூரம் போய்விடு
துவண்ட மனசுக்குள் தூறல் நின்டுபோச்சு..
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...