எதிர் பார்ப்புகளின் ஏமாற்றங்கள்
எட்டித் தொடும் இடத்தில்
இருப்பதில்லைஅஞ்சாதே நெஞ்சே முதலும் முடிவுக்கும்
யாரும் கூடி வருவதில்லை
துடிக்கும் நெஞ்சே துவள்கிறாய் நீ ..
தேடல் இல்லையேல் தேகம் ஓய்ந்துவிடும்
காலம் தாழ்த்தாதே கனிவொடு முகம் கொடு
பேராசை இன்றி உயிராசை இன்றி
உன்னத வாழ்வில் உரம் இட்டுச் செல்
ஏற்றி வைத்த வாழ்க்கை படிகள்
தேம்பி அழுகின்றன, உயர்ந்தவர் எல்லாம்
தன்னை நிந்தனை செய்வதினால்..
Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...