தூளியிலே ஆடுகின்ற என் கண்ணே நீ கண்ணுறங்கு
தூங்கடா தூங்கி எழு தாங்காது தாய் மனசு..அடித்தாரைச் சொல்லி விட்டு
அமைதியுடன் நீ உறங்கு
அவரை நான் பிடித் திழுத்து
ஆக்கினைகள் செய்திடுவேன்..
பஞ்சணையில் நீ உறங்க என் மடியில் தொட்டில் கட்டி
நெஞ் சணையும் தந்துவிட்டேன் முலை முட்டி
உன் பசி ஆறு..
என் கண்ணான கண்ணே என் செல்லமே ஆராரோ
ஆராரோ ஆர் எவரோ அம்மா நான் தூங்கமாட்டேன்
நீ விழி திறந்து பார்க்கையிலே
உனை அடித்தாரை
உன் காலடியில் போட்டிருப்பேன்..
தூளியிலே ஆட வந்த என் கண்ணே நீ கண்ணுறங்கு
தூங்கடா தூங்கி எழு தாங்காது தாய் மனசு..
Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...