எழில் கொண்ட
இயற்கையாளே என் வாசல் வந்தவளே
வண்ண வண்ணச் சட்டை
போட்டு உன் அழகை மெருகூட்டிவிட்டான் வர்ண பகவான்
ஊட்ட ஒளியை உனக்கு ஊட்டி பிள்ளைக் கனியாய்
உன்னை தத் தெடுத்து தாலாட்டுகிறான் ஆதிசேசன்
கை வீசு அழகே கை வீசென
தென்றலாய் உன்னைத் தழுவி
காதலிக்கிறான் வாயு தேவன்
வாழ்க மகளே வாழ்க வென
விண்ணவரும் உனை வாழ்த்த
மண்ணில் இந்த மனிதன் ஏனோ
நன்றி மறந்தான் !
நிழல் கொடை நீ கொடுத்தும்
உன் உடல் அறுத்து உயிர் போக்கி
பிணமாய் எரிகிறான் விறகில்
எல்லை இல்லா எழில் இளவரசியே
உலகெங்கும் உன தாட்சியே
நீ இல்லையேல் உயிர் இல்லையே..
Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...