lundi 20 octobre 2014

மனிதா நீ தாவும் கிளை உடைந்தாலும் ..


மனிதா நீ  தாவும் கிளை உடைந்தாலும்  - உன்
சபலம் சந்தியில் முந்தானை இன்றி கிடக்கிறது
இங்கொரு வீடும்
அங்கொரு சின்ன வீடும் உனக்கு       
பந்தி இலை விரித்து கஞ்சி நிலை வீழ்ந்தாய்
 
ஏறு முகம் கொண்டவன்  ஏழுலகையும் ஆழ
ஏறி வருகிறான் வான் வீதியில் ..
வேலிச் சண்டையில் நீ
சாதிச் சண்டையில் நீ                                                          
மூதேவி குடி வந்து குடி அறுத்தும்
சனியன் வீட்டுக் கதவையும் தட்டுகிறாய்
மழைக் கால இருட் டென்றாலும்
மந்தி உன் குணம் மாறுதில்லையே...
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...