எனக்கொரு பெயர் இருந்தும் என் பெயர் வேலைக்காறி
வேடம் தாங்கல் இல்லை கூலிக்காக
மாரடிக்கிறேன் உலை அடுப்பு எரியுமா எரியாதா என
காத்திருக்கிறது அடுப்படியில் கலயங்கள்
பட்டுணியில் அழுகிறார் பாலகர்கள்
பசி அறியா குடிகார ஊதாரி என் புரிசன்
சேலை முடிச்சவிழ்க்கும் வரைதான்
நான் அவனின் பத்தினி
தினம் போதை ஏற்றி வீடு வந்து
என்னை தீக்குளிக்கச் சொல்கிறான்
சந்தேகப் பிராணி!
கூரையின் ஊடே வானத்து நட்சத்திரங்களும்
எட்டிப் பார்க்கின்றன
இவன் ராமனா குசேலனா என்று ...
Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...