dimanche 27 juillet 2014

முற்றத்து மூன்றாம் பிறை என்கிறார் என்னை ..


முற்றத்து மூன்றாம் பிறை என்கிறார் என்னை
அச்சத்தில் இன்னும் நான் அகதி முகாமில் .!
மாற்றான் இட்ட அனல் காலம்
மாசொடு திங்களெல்லாம்
என்னைச் சுத்தி எரிக்கிறது ..
மூத்தகுடியின் முன் பிறந்த என் தாய்த் தமிழே
நீ செம் மொழியான பின்னும்
செங்குருதிச் சிறைக் காட்டில்
இன்னும் நானும் நீயும் .!
என்று தணியும் தமிழீழத் தாகம் .?
தளிருக்கும் இல்லை இங்கு வசந்த காலம் ..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...