jeudi 17 juillet 2014

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ..


ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே ..
பாட்டில் வடித்து  ஏட்டில் கிடக்கிது
பாழும் கிணற்றில் பாசிச் சுவரொடு
கூண்டில் கிடப்பதேன் தோழர்களே ..
 
ஆடிக் கறக்கணும் ஆவன செய்யணும்
வேடிக்கை மனிதரை வேரோடு
சாய்க்கணும் ..
காலம் எமக்கொரு காலம் பிறக்குது
தீய காவல் அரன்களை
காற்றில் கலைக்கணும் ..
பூத்திரி முகத்தில் பூச்சுடர் ஏற்றி
பாசிப் பயருடன் கூழுங் குடிக்கணும்
ஏற்றம் அழைக்குது ஈழம் தெரியுது
எழுந்து வாருங்கள் எம் தோழர்களே...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...