vendredi 4 juillet 2014

வாடகை கூடுதான்டா சாமி ..

வாடகை கூடுதான்டா சாமி – அட
வாழ்ந்துதான் பார்த்தேன் சின்னச்சாமி
இதயம் துடிக்கிதடா சில நாள்
உயிரோடு வாழ்கிறேன்
இன்னும் அதனால்
 
கருவறையில் சுமந்தவளோ
காலன் அழைத்தானென்றே
கண் துயின்றாள்
நிளல் தந்து நின்றவனோ
இனத் தீ காட்டிலே
சாம்பலானான்
இளப்பதெல்லாம் இளந்துவிட்டு
ஊசலாடும் கூடு இது
வெள்ளரசு மரத்திலே வேதாளம் ஆடுதென்டு
இனியும் நான் செல்லமாட்டேன்
கந்தகத்தை வண்டி கட்டி
நஞ்சு மாலை கழுத்தணிந்து
பிஞ்சு மகன் நானும் வாறேன்
அண்ணனை போலொரு ஆண்டவன் ஏதடா
உரம் தந்து வரம் தந்து நிளல் தந்த சாமியவன்
உலராது இனி ஈழம் தளராத வண்டிக்காரன் நான்...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...