lundi 13 janvier 2014

பொங்கலுக்கு போனவளே போதுமடி உன் கோபம்..


இராத்திரிக்கு ஒரு பாட்டு - என்
ராசாத்தி உன்னை கேட்டு
போட்டாலும் போட்டேன்டி
ஒரு மில்லி ஊர் ஊத்து
ஆடாமல் ஆடிவிட்டேன்
யாரும் இல்லா உலகத்திலே
பூகம்பப் புயலாகி
பொங்கலுக்கு போனவளே
திங்கள் ஏழும் தீர்ந்ததடி
உன் கோபம்  தீரலையோ
அரசாங்க அனுமதியில்
அனு தினமும் விக்கிறாங்க
அந்த நாள் பொங்கலிலே
உன் அப்பனும் இப்டித்தான்
ஆறு வரிச தனி வாழ்வில்
ஆத்தாளும் தள்ளி வைத்தாள்
பொங்கலுக்கு போனவளே
போதுமடி உன் கோபம்
மாதுனை பிரியேன்டி
என் மனையாளே வந்துவிடு
நான், மது விலக்கு செய்துவிட்டேன்...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...