mercredi 22 janvier 2014

பசி வந்த போது பாலுக்கழுதேன்..


பிறந்த போது ஏன் அழுதேன்
எனக்கே தெரியவில்லை
பசி வந்த போது பாலுக்கழுதேன்
அன்னை அரவணைத்தாள்
அன்பெனும் ஆளம் அறிந்தேன்
பள்ளிக் காலத்தில் துள்ளித் திரிந்தேன்
மான் குட்டியாய் கவலை அறியேன்
பருவ கால உச்ச நிலை உஷ்ணத்தில்
ஏன் அமர்ந்தேன் வேடம் தாங்கலில்
இன்று என் கையில் ஓர் குழந்தை
என், தந்தை பெயரை நான் அறிவேன்

என் குழந்தையின் தந்தை யார் ..?
நான் அறியேன் .. !
ச்சீ.. இதுதானா காமத்தின் உச்ச நிலை
கண்ணியம் இழந்துவிட்டேன்
பெண்ணியமே என்னை
கல்லால் அடித்தே கொன்றுவிடுங்கள்..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...