mercredi 15 janvier 2014

கேணல் கிட்டு,வின் 21,வது ஆண்டு நினைவெழுச்சி நாள்...

16.01.1993,அன்று வங்கக் கடலில் வீரகாவியம் எழுதிய கேணல் கிட்டு உட்பட 10, மாவீரர்களின் ஞாபகார்த்த 21,வது ஆண்டு நினைவெழுச்சி நாள்...
கனா கண்ட காலங்கள் கரைந்தோடிச் செல்வதோ
கண்ணீரில் தமிழினம் காலத்தால் அழிவதோ
போராடி பெற்ற நிலம் பொல்லாங்கில் கிடப்பதோ
ஞானப் பழம் அல்ல நெல்லிக் கனியல்ல
இன்னொருவருக்கு தாரை வார்ப்பதற்கு
சுய,உரிமை வாழ்வின் தமிழீழக் கனி இது
இனச்சுத்தி செய்தோர் காலில் ஈழம்
ஈனம் உற்று அழிவதோ
நிலாச் சோறு உண்ட நிலம்
ஒளி இன்றி மாள்வதோ
உலகத் தமிழா உறங்காதே
உன் கையில் இன்று யுத்தம் நீ விடாதே
இனச் சுத்தி செய்தவன் இடி பாட்டில் அழிகிறான்
காலக் கூண்டில் நீதி தேவன் நெற்றிக் கண் திறக்கிறான்
நிச்சயம் தமிழீழம் நன்றே என்பான்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகமே...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...