jeudi 10 avril 2014

ஏதிலியாம், என்னை ஏளனம் செய்கிறார்கள்...


வண்ணக் கலவைகளை எண்ணச் சிந்தனையில்
இன்னும் எத்தனை நாள் குளைத்தெடுப்பேன்..
நாடுளந்து நாடு நாடாய் அலைந்தும்
புகலிடம் என்னும்
புகுந்த நாட்டிலும் கிடைக்கவில்லை..!
ஏதிலியாம்,
என்னை ஏளனம் செய்கிறார்கள்
நம்பிக்கை இருந்தது
தாய்த்தேசம் திரும்புவேன் என்று
இன்று ஆளுக்கொரு பக்கமாய்
ஏதேதோ உளறுகிறார்கள்
அவரவர் வேலிக்கே
தாழ்பாள் இடுகிறார்கள்..!
விடுதலை என்ன விலை மலிவா..?
எல்லோரும் கடையில் வாங்கிக்கொள்ள.!
ஏன் மறந்தாய் என் உறவே
நான் இன்னும் சிறையில்
இன்னுமா நீ நித்திரையில்
கேழ்வி கேக்கிறது உன் தாய்த்தேசம்..
உன்னை, என்னை, நாளை நம் பிள்ளைகளையும்...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...