mercredi 16 avril 2014

வெய்யிலாய் நானும் வெண்நிலவாய் நீயும்...


வெய்யிலாய் நானும் வெண்நிலவாய் நீயும்
பன்முகக் கீற்றின் பட்டொளியில்
நமது மலர்ச் செடிகள்...
கோடை கண்டும் எரியவில்லை
வாடை வந்தும் வாடவில்லை
பிறந்த வீடென்றும் புகுந்த வீடென்றும்
நிறமாற்ற பேதம் இல்லை
இன்று வீழ்ந்தாலும் நாளை வீழ்ந்தாலும்
நமக்கென்ன கவலை
நிழலுக்கும் பஞ்சம் இல்லை...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...