lundi 21 avril 2014

வாழ்க்கையெனும் தோட்டத்தில்...


வாழ்க்கையெனும் தோட்டத்தில்
வண்ணம் பூத்திருந்தேன்
எத்தனையோ விரல்கள்
என்னைத் தொட்டன..
இருந்தும் ,
காம்புதிராமல் பறித்தவன்
நீ ஓருவனே..!
வியப்பில் விழிகள் பட படக்க
உன்னையே பார்த்திருந்தேன்..
என்னை ஏந்திச் சென்ற நீ
உன் மனைவியின் கூந்தலில்
சூடிவிட்டாய்..!
எதிர் பார்க்கவில்லை நான்
வெக்கித்துப்போனேன்..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...