lundi 21 avril 2014

பருவ கால வெண்முகிலே...


பருவ கால வெண்முகிலே - இருள்
கோடியிலே  ஏன் வீழ்ந்தாய் நீ..?
கூந்தலுக்கு வாசம் தரும் பூக்களுக்கும்
என்னிடம் பாசம் இல்லையாம்..!
விதவை என்று சொல்லி
எட்டிப் போகின்றன...!
பூவை உன்னோடு பூவே கோபம்
கொண்டால், பூமி தாங்குமா.?
அந்தச் சாமிக்கும் கோபமா.?
சாமி என்ன சாமி.., அன்பை கொன்று
அழகை தின்கின்ற முதல் ஆசாமியே
அவன்தானே...
தாலி தர யாரும் முன் வருவார் இல்லை
தாசி என்றதும் வரிசையில் வருகிறான்,  
ஆண்மகனாம்..!

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...