dimanche 13 avril 2014

கோடு போட்டு வாழ கூசுதடி நெஞ்சம்...


கொல்லாமல் கொல்லும் கண்ணே
நீ., தாழம் பூ நாகமடி...
மெய்யான அன்பை பொய்யாக்கி
விலைக்கே வித்துவிட்டாய்...!
மணல் வீடு கட்டவில்லை நான்
மழை கண்டு துடிப்பதற்கு
மாளிகை கட்டவில்லை
யுத்தம் கண்டு அஞ்சுதற்கு
ஆராதனைக்குரியவளே
நீயும் நானும் இணைந்து கட்டியது
காதல் கோட்டையல்லவா..
ஏன் தகர்த்தாய்..?
கோடு போட்டு வாழ கூசுதடி நெஞ்சம்
கூடுவிட்டு ஆவி போனால்
கூடும் இடத்தில் காண்போம் சமரசம்...!

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...