பணம் விரித்த பந்தியில் தாவி
மனம் ஆனது குரங்குபதவி ஏறி பல்லக்கில் அமர்ந்து
ஊர்கோலம் போனது நேற்று
பட்டுச் சொக்காய் பளபளப்பு
மின்னிக் கருகி கொள்ளியாச்சு
குறுக்கே நாலு கம்பிகள்
கொழுத்த பூட்டு
இதெல்லாம் எதற்கென
என்னை நான் நோகும் முன்னே
சிரித்துக்கொன்டே சொன்னது சிறைச்சாலை
திருட்டு நாயே கம்பிகளை எண்ணு
கஞ்சி ஊத்துறேன்
கட்டன் போட்ட குட்டை கால்ச்சட்டை
குரங்கை விரட்டப் போதும் என்றது...
Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...