mardi 13 janvier 2015

பூவே நீ பூவிழி உறங்கு...


மனசை பறித்தாய் எங்கே வைத்தாய்
மௌனத் தவத்தில் மூழ்கித் திளைக்கிறாய்
என்னைத் தொடாமல் ஏனோ போகிறாய்
ஏன்தான் இந்த மௌனம் சொல்லு சொல்லு
 
உன்னைத் தொடுவது இனியது
தொடுந் தூரம் தொலைவென்பதால்
தொடர் பறுந்த தூரம் இது
மது எது மாதெது மயங்குகிறேன்
மன திழந்து மௌனம் கலைந்தால்
இதயம் உடையும்
இருவிழி நனையும்
உடன் பாடில்லா முறன்பாடு
மௌனக் குளத்தில் வீழ்ந்துவிட்டேன்
மறுமொழி எதுவென தேடுகிறேன்
விடை எதுவென தெரிந்தும்
விழியினில் மூடி வைத்துவிட்டேன்
பூவே நீ பூவிழி உறங்க
கார் இருள் கொள்ளு
கலையா கனவில் வந்து கலவி
மௌனம் கலைத்திடுவேன் ...
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...