dimanche 1 février 2015

புனர் ஜென்ம மலரே காத்திரு.. ..


இனிமை நினைவிலும் இளமைத் துளிரிலும்
என் உள்ளம் வருடும் பெண்மையே
நான் உருகும் மெழுகு பொம்மையே
ஒரு பக்க பூவிலும் மறு பக்கத் தலையிலும்
வாழ்க்கை நாணயம் இல்லையடி
உன் பூமுகச் சிரிப்பை கருக்கும் திரியில்
ஒளிமுக நாடகம் ஏதுக்கடி
உருகுது மனமும் உளறுது நினைவும்
உன் நினைவலை எடுத்தே போகின்றேன்
மறுமுறை ஒரு முறை கருவறை ஒன்று
என் திருமுகம் தந்தால்
புனர் ஜென்ம மலரே காத்திரு
வாழ்வினில் கொடியது நோய் எனத் தெரிந்தும்
வரம் வாங்கி நான் வந்து பிறப்பேன்
வா வா மலரே அன்றுன்னை நான் அறிவேன்
விடைதா இன்று இதுதான் விதியென்றால்
அந்த விதியோடு நான் போகின்றேன்...
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...