samedi 24 janvier 2015

மனிதன்...

கருவில் உருவாகி மடியில் விளையாடி
மழலை மொழி பேசி பகிர்ந்துன்டான் மனிதன்
தடங்கள் இருக்கின்றன, அவனை காணவில்லை!

மனிதன் எங்கே ? தேடுகிறேன் !
எழுத்தில் இருக்கிறது உயர் வழ்வு
உரிமை இல்லை உயிர் இல்லை
இப்போது அதற்கு !
மக்களை பெறுகிறாள் மாதரசி மகராசி

மனிதம் செத்து புனிதம் புறையோடியதேன்
சுடாமல் சுடும் வாழ்வுக்குள்
தொடாமலே தீயுது நெஞ்சு
ஆசை மோகம் குரோதம் இத்தியாதி இத்தியாதி
வைரஸ் என்பார் இதுதானோ 

தீக்குச்சியும் தேவை இல்லை
கண்ணாடியில் முகம் பார்த்தேன்
மனிதனை காணவில்லை
புனிதம் அற்றவர்களில் நானும் ஒருவனே
நிலை நிறுத்தியது கண்ணாடி

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...