lundi 31 mars 2014

போதும் என்றும் எனக்கு ஒரு தாரம்....


மொழி அறியா காதலியே உன் விழியாலே
நீ எனக்கு விரசம் ஊட்டி விட்டாய்
உன்னை நான் பருக
என்னை நீ பருக
அச்சம் மறந்தேன்
நீ கூட்டிச் சென்ற இடம் ஏதடி..?
 
தட்டிய கதவு திறக்கப் பட்டது
எதிரே என் காதலி
எரித்துவிட்டாளே
என்னையும் உன்னையும்
விவாகம் ஆகவில்லை
விவாகரத்தும் தந்துவிட்டாள்
ஏன் மணந்தேன் இருதாரம்
இனியும் தொடேன்
சீவாஸ் பதினெட்டே...
போதும் என்றும் எனக்கு ஒரு தாரம்
மன்னிப்பாளா என் மரிக்கொழுந்து..?
தெரியவில்லை..!
தொலைத்துவிட்டேன் உன்னால்
என் வாழ்வாதாரம்....!

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...