jeudi 6 mars 2014

ஆகாசப் பூக்களை பறிப்பேனா..?

வண்ணத் தோகை விரித்து - தோள்
சாயும் என் அரும்பே...!
உனக்கொரு நகை செய்ய
ஆகாசப் பூக்களை பறிப்பேனா..?
தினம் தினம் நீ சிந்தும் புன்னகை
முத்துக்களை எடுத்து - மாலை
கோர்த்து வைத்திருக்கிறேன்.!
உன் மாங்கல்யத் திரு நாள் என்றோ
அன்றே அதை உனக்கே சூடி
நான் வாழ வைப்பேன்...!
அதற்காகத்தானே மகளே..,
இன்னும் உயிர் வாழ்கிறேன்..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...