vendredi 25 mars 2016

அக்கினிக்குண்டத்தில் அகம்பாவம் அழியட்டும் !!!




மூல நாயகனே முக்கண் இறையே சிவ சிவா
மதங்களின் வடிவில் உன்னை காண்கிறேன்
வேருக்கும் நீர் இன்றி நிழல் தரு மரமும்
போருக்குள் வீழ்ந்து மாள
உரிமை மீரலுக்குள் உன் அடியார்கள்
மானுட பிண மலைகளாய் குவிந்தும்
நீ வாராதிருப்பதேனோ ?

மதங்கள் எனக்கும் பிடிக்கும்
மதம் என்னை பீடித்திடாதிருக்க
நின் தாழ் பணிகிறேன்
பூயைகளில் பூரித்தது போதும்
எமக்கான யாக வேள்விக்கு நீயே நெய் ஊத்து
அக்கினிக்குண்டத்தில் அகம்பாவம் அழியட்டும் !

Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...