ராத்திரிக்கு
தூக்கம் இல்லே ராத்திரியே கண்ணுக்குள்ளே
சொன்ன சொல்லு என்ன
ஆச்சு சொல்லடி கண்ணே
பட்ட காலிலே காயம்
பட்டு றெக்கை இன்றி துடிக்குது
மனம்
கண்ணுக்குள்ளே
மானம் கெட்ட
பிளைப்பாச்சு மாசு பட்ட மனசாச்சு
நாலுங் கெட்டு
போச்சுதடி ஊருக்குள்ளே
நல்ல நாத்து
தண்ணீர் இன்றி
வயல் காட்டில்
வாடுது நெல்லு
வரப்பிருந்தும்
வற்றிய காட்டில் குத்துது நெரிஞ்சி முள்ளே
தேர் இழுப்பில் ஊர்
இருந்தும் தெய்வத்தை காணலையே
தெப்பக் குளம்
உப்புக் கடலாய் மாறி ஊருக்குள்ளே
துவளும் கொடியே உன்
விழி நீர் கூட வண்டுக்கு தேனாச்சே
ஒற்றை காம்பின் ஊதா
மலரே ஊனம் கொள்ளல் பாவமடி
சோகம் விட்டு
தீயாய் எழு எரிமலை கூட பணியும் பாதம்
உன் சூரிய
விழிகளின் நேரிய பார்வை
எரிக்கட்டும்
தீமையை எழுந்து போராடு
Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...