மூக்குத்தி
தைத்த இடம் கண் பட்டு போகுமென்றே
தொட்டு
வைத்தேன் மலரிதழால்
சிரு,துளி பசும் பால்
அதன் மேல்
செவ்விதழுக்கு
ஏனடி கோபம்
உன்னிரு
இதழ்கள் இரண்டும்
வரம்
பெற்றதோ தெரியவில்லை
ஓடி
வந்து முத்தாரம் தந்துவிட்டு
திரும்பிவிட்டதடி
மீன்டும்
உன்னிடம்
தேயாத முழு நிலாவே உலா போகிறேன் நான்
உன் முகம் பார்த்து எங்கும் ஒளிமயம்
முப்பாலில்
ஒன்றுதானே காமத்துப்பால்
அதன் ஊற்றறிந்தவன்
காதல் என்கிறான்
வேதம் புரியாதவன்
மோதல் கொள்கிறான்
யார் மீது குற்றம்
இதில் என் வழக்கு தீரவில்லை..!
Kavignar
Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...