jeudi 22 mai 2014

ஒரு முறைதானே வாழ்க்கை..


ஒரு முறைதானே வாழ்க்கை உனக்கும் எனக்கும்
இதற்குள் எப்படி உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற
இடை வெளி இருவருக்கும்..!
பிறப்பில் அதிசயம் இல்லை
இறப்பில் மாற்றம் இல்லை
ஆணுக்கு பெண்ணும்
பெண்ணுக்கு ஆணும் என
இரு யாதிகளே இவ்வுலகில்
இரண்டும் கெட்டான் நிலையில்
இத்தனை ஜாதிகள் எப்படி முளைத்தன.!
வீதிகளிலும் ஜாதிப் பெயர்கள்
விஷ விதையாக தூவப்பட்டிருக்கின்றன
அனைத்தும் வீழ்ச்சிக்கே என்பதை
எப்போதுதான் நீ உணர்வாய் மனிதா...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...