ஆசை மழைத் தூரலே
சாரலாய் வந்து - என்
னை நீ தொட்டுச்
சென்றுவிட்டாய்..!
நீராடை மேல்
மின்னும் வைர
முத்துக்களைக் கண்டு
ஆசை தீரவில்லை
அள்ளி அனர்த்தம்
கண்டேன்..!
வானுயர்ந்த தன்
ஆதவனிடத்தில்
யாடை மொழியில் ஏதேதோ
சொல்லி
என்னை கேலி
செய்கிறாள்..!
அள்ளிய வைரங்களை
அப்படியே
போட்டுவிட்டேன்..!
புழுதியிலே
வீழ்ந்ததினால்
குடைக்குள் ஒதுங்க
எண்ணம் இன்றி
மாசு தனை கழுவிப்
போகிறேன்..
தொடாதே என்னை நீ..
தாங்காது என் மனசு...
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...