dimanche 23 février 2014

கொடி இடை வளைந்த தாமரையாள்..


ஆசை மழைத் தூரலே சாரலாய் வந்து - என்

னை நீ தொட்டுச் சென்றுவிட்டாய்..!

நீராடை மேல் மின்னும்  வைர

முத்துக்களைக் கண்டு ஆசை தீரவில்லை

அள்ளி அனர்த்தம் கண்டேன்..!

 கொடி இடை வளைந்த தாமரையாள்

வானுயர்ந்த தன் ஆதவனிடத்தில்

யாடை மொழியில் ஏதேதோ சொல்லி

என்னை கேலி செய்கிறாள்..!

அள்ளிய வைரங்களை அப்படியே

போட்டுவிட்டேன்..!

 பூவுலகை காணவந்து

புழுதியிலே வீழ்ந்ததினால்

குடைக்குள் ஒதுங்க எண்ணம் இன்றி

மாசு தனை கழுவிப் போகிறேன்..

தொடாதே என்னை நீ.. தாங்காது என் மனசு...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...