dimanche 2 février 2014

எங்கள் தேடல் இன்னும் முடியலையே...


மனசே மனசே கலங்காதிரு... என் உசிரும் தாங்காதே...
உள்ளே உன்னை பூட்டி வைத்தேன்
அணையை உடைக்காதே...
தேச விடியலை தொலைத்தாலும்
எங்கள் தேடல் இன்னும் முடியலையே...
இனக் கொலையாலே இனம் அழிந்தோம்
உலகே வனக் கொலை என்றே நினைத்தாயோ
முற்றுப் பெறவில்லை அந்த முள்ளி வாய்க்கால்
கொத்தணிக் கொலைகளை மறைக்காதே...
பெண்ணே பெண்ணே நீயும் கலங்காதிரு
உன் பிணத்தில், பெண்மை திண்ட பேய்கள் கரைவாரே
சூரியன் உடைவானோ.. தமிழீழ உதயம் மறப்பானோ..
அகிலம் விழிக்கலைன்ணா எங்கள் அண்ணன் வருவானே...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...